130: செண்டுவெளியாட்டம் : 02
“மானுடர் அதிகாரத்தின் முன்னரே தலை பணிவர். அதுவும் பொய்யமைவே. எங்கும் எதிலும் பணிய முடியாதவர் என எவருமில்லை. பணிவில் எஞ்சும் ஆணவமே பணிபவரின் மெய்யுரு.அறமும் அதிகாரம் கொண்டதே. அதன் அதிகாரமே முற்றுறுதியாதன வல்லமை கொண்டது. ஆகவே அரசர்கள் அதை அஞ்சுகிறார்கள். காவியர்கள் அதை வணங்கி பிறிதொரு அறத் தெய்வத்தில் அதை நிலை நிறுத்துகிறார்கள். வீரர்கள் அதைக் காக்கும் மானுடக் கவசங்கள் மட்டுமே” என உரத்த குரலில் சொல் பிளிறிக் கொண்டிருந்தான் …
