30: முதற் பருவம் : அறிக
புலரியின் முதற் புள் பாடத் தொடங்கி வனம் விழித்து சிறகுகள் கொண்டு பல்லாயிரம் பறவைகளின் குரல் நாண்கள் விடுபட்டு ஒலிப்பெருக்கனக் குழைந்தெழத் தொடங்கியது. காட்டு விலங்குகள் மானுட அதிர்வுகளை உய்த்து விலகிக் காட்டுக்குள்ளேயே அடங்கி ஓசையற்று அலைந்தன. நாகதேவியின் காவல் எல்லைகளை செப்புத்தகடுகளாலான காவல் முத்திரைகளைக் கொண்டு ஒவ்வொரு விலங்குக்குமெனக் காவலைப் பகிர்ந்தளித்தார் ஆடற் சித்தர். நாகதேவியின் கடைசி எல்லையில் இரு நாகங்கள் பின்னியிழையும் பொன்னாலான நாகபாட முத்திரைத் தகட்டை …
