10: மயக்கு விளி
“போரில் நான் கொன்றவர்களை உயிருடன் எழுப்பினால் இன்னொரு அரசையே நான் நிறுவ முடியும் மூடனே” என்று ஆங்காரமாகக் கத்தியபடி தன் வெட்டுப்பட்ட குறைக் கரத்தை உயர்த்தியபடி மதுவில் உடல் நடுங்க மதுச்சாலை வாசலில் சாய்ந்திருந்தான் வாகை சூடன்.அவனது இடக்கால் சதைகள் துள்ளியணைந்தன. “என் உடலில் பாய்ந்த அம்புகளைக் கொண்டு என் படைக்கலத்தை ஆக்கிக் கொள்வேன். வடித்த குருதியைக் கொண்டு என் அரண்மனையை மண்ணில் குழைத்துக் கட்டி முடிப்பேன்” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் …
