மணி மருள் பூ
காத்திருப்பின் மென்னொலிக்கு அதிராத காதலுள்ளங்கள் உண்டா!கொல்லன் அழிசியின் இக்கவிதையில் கருநொச்சி விழும் ஓசை கேட்குமளவுக்கு உள்ளம் தன் அனைத்துப் புலன்களையும் காதுகளக்கிக் கொண்டு விழித்திருக்கும் தவிப்பில் எழுவது எது! கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,எம் இல் அயலது, ஏழில் உம்பர்மயிலடி இலைய மா குரல் நொச்சிஅணி மிகு மென் கொம்பு ஊழ்த்தமணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. இப்பெரும் ஊரில் யாவரும் உறங்கினாலும் எமக்குத் துயில் விழவில்லை. நள்ளிரவில் …
