விசும்பு ஆடு அன்னம்
சிறுவயதிலிருந்தே தேர் என்பது இருப்பதில் ஆகப்பெரிய அசையும் மரச்சிற்மென மனதில் ஆகியிருக்கிறது. குரும்பைகளை வைத்து ஈர்க்கில் கோர்த்து ஆக்கும் குரும்பட்டித் தேர் முதல் ஆயிரமாயிரங் கரங்கள் தொட்டு வடக்கயிறால் இழுக்கும் பெருந்தேர் வரை எல்லாமே காதணி பூண்டு சிற்பச் சிறகுகள் அசைத்து மண் ஊரும் பறவையென ஆடி வருவது. சங்க காலத்தில் போக்குவரத்திற்கென வாகனமாகப் பயன்படுத்தப்பட்ட தேர் எப்பறவையெனத் தோற்றங் கொள்ளுமென உலோச்சனாரை வாசிக்கும் வரையில் தெரிந்திருக்கவில்லை. மின்னுச்செய் கருவிய …
