வரலாற்றை நேர்மையாகக் கற்பது

ஜெயமோகனின் இந்தக் காணொலி ஒருவர் எதற்காக வரலாற்றைக் கற்க வேண்டுமெனச் சுருக்கமாக வரையறுக்கிறது. வரலாற்றின் பருமட்டான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாத ஒருவர் எதிர்காலத்தை நோக்கி எள்ளளவேனும் சிந்தனை செய்யும் அடிப்படைத் தகுதியின்மை கொள்கிறார். குறைந்த பட்சம் தன் காலத்திலேனும் அவரால் வாழ முடியாது. பிறப்பும் சமூகச் சூழ்நிலைகளும் இயல்பாக ஆக்கி அளித்தவற்றைக் கொண்டு வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளை உண்டாக்கிக் கொள்வது மடமை. இக்காணொலியில் ‘குறைபட்ட’ அறிவைப் பற்றி ஜெயமோகன் சொல்வதை …

பொலிக!

மானுடருக்கு கலையும் இலக்கியமும் எதை அளிப்பதற்காக மண் நிகழ்கின்றது என்பதும் எதன் பொருட்டு என்பதும் பல முதன்மையான கலைஞர்களால் சொல்லப்பட்டே வருவது. ஜெயமோகனே குறைந்தது ஆயிரம் உவமைகளால் சொல்லியிருப்பார். இன்று இந்தக் காணொலி இன்னொரு உவமையிலிருந்து தோன்றுவது. பொலிக என ஆணையிடுவது!

இளம் எழுத்தாளர்களுக்கு

ஓர் இளம் எழுத்தாளனாக இலக்கியம் அளிக்கும் சவால்களை ஓயாது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அறிதலின் இன்பம். எழுதுதலின் குன்றாத வேட்கை. ஜெயமோகனின் இந்தக் காணொலி இளம் எழுத்தாளர்கள் பற்றியிருக்கும் அவநம்பிக்கையையும் சலிப்பையும் அதிலிருந்து மீளும் வாசல்கள் பற்றிய திறப்புகளையும் சுட்டுவது. அறிதலும் காலமும் மாறிக்கொண்டேயிருப்பது. காலத்தைப் போலவே அறிதலும் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு மட்டுமே முன்னேறக் கூடியது. அண்மையில் வாசித்த கற்றலைப் பற்றிய ஜெயமோகனின் சில வரிகளும் இக்காணொலியின் சவால்களை …

கீதை : பேருரை

கீதைக்கான நாடகீயத் தருணத்தால் அது மதிப்பு மிக்கதாக ஒரு கலையாக்கத்தில் இடம்பெறுகிறது என்ற கருத்து முக்கியமானது. அரசியல் சரிநிலைகளுக்கு அப்பால் ஒரு நூலை அதன் வரலாற்று, தத்துவ, மெய்யியல் பார்வையில் வைத்து நோக்குவதும் முக்கியமானது. ஜெயமோகனின் இந்தப் பேருரைத் தொடர் கீதையை என்று மட்டுமல்ல. ஒரு நூலை புரிந்து கொள்வதற்கான பல வாயில்களையும் சாளரங்களையும் திறப்பது.

கவனச் சிதறல் பற்றி..

நம் காலத்தில் சலிப்பினாலும் பொருளற்ற வெற்றுக் கேளிக்கைகளாலும் தொடர்ந்து தங்கள் கவனிக்கும் திறனை இழந்து வரும் நூற்றுக்கணக்கானவர்களை நானும் அறிவேன். நானும் கூட இந்தச் சிக்கல் கொண்டவன். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சமூக வலைத்தளங்களை தொடர்ச்சியாக கவனித்ததின் வழி என் மன அமைப்பில் உண்டான நுண்ணிய மாறுதல்களை கடந்த பத்து மாதங்கள் அவற்றை விட்டு நீங்கிய பின்னர் வெகுவாக உணர்கிறேன். முதலில் எதையும் கருத்தூன்றிக் கவனிப்பதில் தொடர்ந்து சில …

குறுந்தொகை : ஜெயமோகன் உரை

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் நூல் சங்க இலக்கியத்தை வாசிக்கும் புனைவெழுத்தாளனின் நுண்மையான தொடுகையிலிருந்து பிறந்தது. சங்க இலக்கியம் ஒரு புதையல் சுரங்கம் போன்றது. அதற்கு மரபான வாசிப்பு இலக்கண வரம்புகளாலான ஒற்றைப் பெரும் வாயிலைக் கொண்டிருந்தது. நவீன எழுத்தாளர்கள் அதைச் சுகிப்பதற்கான பல வாயில்களை உண்டாக்கினர். ஜெயமோகனின் பார்வைக் கோணம் அன்றாட வாழ்விலிருந்து சங்கக் கவிதைகளை அணுகுவது. ஒரு தியானப் பயிற்சியின் போது நுண்சொல் போலக் கவிதையை ஏற்றுக் கொள்வது. …

சங்கறுத்துக் குருதிப்பலி

இலக்கியம் மனிதர்களுக்குள் தூர்ந்து போய்க் கொண்டிருக்கும் கற்பனை எனும் ஊற்றை வெட்டி ஆழமாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுவது. வாழ்க்கை பற்றிய பார்வைகளை உண்டாக்கிக் கொள்ள வாசிப்பு ஒரு மனிதரை எப்படி நகர்த்துகிறது என்பதற்கு வாசகரும் புத்தக வியாபாரியுமாகிய செந்தில்குமாருடைய இந்த நேர்காணல் ஒரு உதாரணம். அவரது சொற்களில் உள்ள கள்ளமின்மை இலக்கியம் மனிதரை எங்கனம் பண்படுத்துகிறது என்பதற்கு ஒரு சாட்சி.

Master class

பரிசல் கிருஷ்ணா ஜெயமோகனிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில்கள் இன்று எழுத வரும் இளைஞர்களுக்கும் வாசகர்களுக்கும் மிக அடிப்படையான வரையறைகளை முன்வைப்பது. கடுமையான நோன்பிற்கான ஆசார விதிகளைப் போலத் தோன்றுவது. இலக்கியத்திற்கெனத் தன்னை ஒப்புக் கொடுப்பதற்கான பலியைக் கேட்பது. இந்த நேர்காணலில் ஜெயமோகன் துல்லியமான அவதானிப்புகளை எடுத்துரைக்கிறார். சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும் சமூக சராசரிகள் பற்றியும் அவர்களது வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார். கலைக்கென ஒருவர் கொண்டிருக்கும் தீவிரம் மட்டுமே …

நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?

இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் நகைச்சுவை உண்டு. அது ஒரு அம்சம். ஆளுமையின் ஒரு பகுதி. ஒரு திறப்பு. ஒரு கிரியேட்டிவ் தருணம். வீட்டின் ஒரு பக்கம் என்பதைப் போல. தமிழ்நாட்டு இலக்கியவாதிகளில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளையவர்கள் வரை …

சிருஷ்டி கீதம்

சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ஏதுமிருக்கவில்லை. ஆதியில் இருட்டு இருட்டால் மறைக்கப்பட்டிருந்ததுவேறுபடுத்தயியலாமையால்யாவும் நீராக இருந்ததுஅதன் உயிர்த்துவம் வெறுமையினால் போர்த்தப்பட்டிருந்ததுஅதிலிருந்து முடிவிலாத தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது. ஆதியில் அதிலிருந்து இச்சை எழுந்ததுமனதின் ஆரம்ப விதை அதுதான்இதயங்களில் தேடுகின்ற கவிஞர்கள்தங்கள் ஞானத்தினால்இன்மையில் …