பித்தம் தெளிய வைத்தல்

நண்பரொருவர் கீழ்க்கண்ட பதிவின் பகுதியை அனுப்பியிருந்தார். “இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் ‘பாவனை’ எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது ‘குருவின்’ பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார். நான் சொன்னேன், காலமான …

மூதன்னையின் இரண்டாம் தொடுகை

என் மூன்று ஆசிரியர்களின் ஆசி பெற்ற அந்த நாள் வியாச குரு பூர்ணிமா என அடுத்த நாள் யதார்த்தன் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு வருடமும் வரும் வைகாசி முழு நிலவு நாளை வியாசரின் பிறந்த நாளாக, குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் வெண்முரசு நிறைவடைந்த பின்னர் ஆண்டு தோறும் வெண்முரசு நாளாகாவும் அது கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய ஒரு நாளில் இத்தனை ஆசிகள் கிடைத்திருப்பது முதலில் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது பொறுப்பாகவும் …

மூன்று ஆசிரியர்கள்

இந்த நாள் போல ஒன்று எனக்குத் திரும்ப நிகழ முடியாது என்று தோன்றுகிறது. அரிதாகவே தன் கல்லுதட்டை இளக்கும் ஒரு தெய்வம் என்னைத் திரும்பிக் கூர்ந்து பார்த்துப் புன்னகைத்தது போல ஒரு நாள். காலையில் எழுந்த போது வட்ஸ் அப்பில் தர்மு பிரசாத் ஒரு லின்கை அனுப்பியிருந்தார். ஜெயமோகன் தளத்தில் என்னைப் பற்றிய தமிழ் விக்கி குறிப்பை பகிர்ந்திருந்தார். ‘கிரிசாந்’ என்கிற பிரகிருதி தமிழ் இலக்கிய உலகில் வாழ்கிறான் என …

ஞான பீடம் : கண்டனம்

“யோவ் மிலிட்ரி .. வைரமுத்துக்கு ஞான பீடம் கொடுத்தற்கு கண்டனமில்லையா? அகழ் போன்ற பண்ணையார்புரங்களே கண்டனம் வெளியிட்டு விட்டன. தமிழ் இலக்கிய உலகமும் இணையப் பெண்ணியர்களும் ஒரே கோரிக்கைக்காக அணிந்திரண்டு நிற்கும் இது போன்ற அபூர்வமான ஒரு வரலாற்றுத் தருணம் இனி நடக்காது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மான்களும் புலிகளும் ஒரே கோரிக்கைக்ககாக முழக்கமிடுகின்றன.  வெட்டு ஒன்றாய்ச் சொல்லுங்கோ. யுத்தத்தில நீங்கள் ஆற்ற பக்கம்?”  “பிதாமகற்ற”. “தமிழ் இலக்கிய உலகத்தை …

Influencers

ஈழத்துச் சூழலில் இலக்கியம் மற்றும் செயற்களங்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று எனது சிந்தனைகளின் வழி என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பாதிப்பை நிகழ்த்துகிறேன் என்பது. அச்சுற்றியுள்ளவர்கள் என்னைப் போலப் பேசுகிறார்கள் என்பது. உண்மையில் பாதிப்பைச் செலுத்துமளவு சில அடிப்படை விடயங்கள் சார்ந்த அறிவுழைப்பும் செயற்கள உழைப்பும் கொண்டவனாகையால் எனக்கு அவ்விதமான இயல்புகள் உண்டு என்பதை அறிவேன். உரையாடல்களின் வழி உண்டாகும் சிந்தனைத் தாவலை நண்பர்கள் கேட்டுக் கொண்டிருப்பது அதனாலேயே. இதனை …

அமைப்பு, செயல், நெறிகள்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்று அமைப்புகளில் செயற்பட்டவன் என்ற அடிப்படையில் ஜெயமோகனின் அமைப்பு பற்றிய விளக்கங்கள் பொருள் பொதிந்தவை என அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும். மேலதிகமாகச் சில விடயங்களைக் குறிப்பதென்றால் ஒன்று, அமைப்புகளை அல்லது இலக்கியக் குழுக்களை அரசியல்மயப்படுத்துகிறேன் எனும் பேர்வழியில் நுழைந்து தன் சொந்த அரசியல் திட்டங்களை பாம்பு தலையை நுழைப்பதைப் போல போட்டுக் கொள்பவர்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும். முதலில் பரந்துபட்ட சிந்தனையாளராக முற்போக்காளராகத் தோன்றுபவர்கள்   …

கூட்டத்துடன் தனித்திருத்தல்

ஜெயமோகனின் இந்த உரை இன்றைய கால மனிதருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிய கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டது. ஒரு எழுத்தாளராக கூட்டத்தையும் தனித்திருத்தலையும் பயின்று வருவது என்னளவில் மிக அடிப்படையான வாழ்முறையாக மாறி வருகிறது. இந்த உரையின் சிந்தனைகளை ஒருவர் தன் சிந்தனையுடன் மோதிப் பார்த்துக் கொள்ளலாம்.

ஒஷோ : ஓர் உரை

ஓஷோவை அறிவதில் உள்ள சிக்கல் அவரை ஒரு ஊழ்க சாமியாராக எண்ணுவதில் உள்ளது. ஒஷோ அவரே தன்னைச் சொல்லிக் கொண்டது போல ஒரு அழைப்பு. அவரது சிந்தனைகள் ஒரு கூர்மையான தொல் ஆயுதங்கள் போன்றவை. அவற்றைக் கொண்டு நாம் சிந்தனையில் உண்டாக்கிக் கொண்டிருக்கக் கூடிய கற்சுவர்களை உடைக்க வேண்டியிருக்கிறது. ஜெயமோகனின் இந்த உரை ஓஷோவை அணுகுதலின் இன்னொரு கதவைத் திறப்பது.

பேய்க் கதை

ஒரு கதைக்கென உண்டாகும் வரலாற்றுப் பின்னணி அக்கதையின் வடிவத்தையும் வெளிப்பாட்டு நுட்பங்களையும் மாற்றிக் கொள்வதை ஜெயமோகன் சுவாரசியமாக விளக்கும் காணொலி இது. பேய்க் கதை கதைக்காமல் போ என்ற ஈழத்து வட்டார வழக்கில் உள்ள பகுத்தறிவுடன் அன்றி இலக்கியம் என்னும் கனவுடன் அணுகும் வாய்ப்பை திறப்பது.

எங்கோ ஒரு கிளி

வியாசர் பற்றிய ஜெயமோகனின் இந்த உரை பண்பாட்டில் நீடிக்கும் காவியத்தின் தன்மை பற்றிய அக மற்றும் புறச்சித்திரத்தை கொடுப்பது. ஒரு கதையும் கதையாசிரியரும் தொன்மமாகி மிளிரும் காலத்திலிருந்து அதைச் சிந்திப்பது.