நிஜந்தன் தோழன்
நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டதுதூரம் முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றனஇருவரில்ஒன்று போலிருந்த காயங்கள் மிச்சம்பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,இனியில்லைமருந்துகளுக்கும் வலிகளுக்கும்மேலால் மேவி எழுகிற புன்னகை.அறியு முன்பேநழுவிவிட்ட முகமும் குரலும், சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீஉந்த வாழ்வையும்இந்தச் சாவையும் இனியில்லை உனக்குஇருண்டகாலத்துக் குரல்கள்,நித்திய விடுதலை,சமாதானிக்கட்டும் உனது வெண்மை. இல்லாது போனகருணையின் பாகங்கள் பொருட்டுஇன்னும் கொஞ்சம் கண்ணீர். ஒருநாள் வருவேன்உனது குரல் தொடுகிற தெருவில் மருந்து மணக்காத தாழ்வாரங்களில்குமிழ் எரிகிற இருளில்அவ்வப்போது கொள்கிற மாத்திரைகளில்சரிகிற புத்தகங்களில்கசிகிறதுனது குரல் …
