நிஜந்தன் தோழன்

நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டதுதூரம் முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றனஇருவரில்ஒன்று போலிருந்த காயங்கள் மிச்சம்பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,இனியில்லைமருந்துகளுக்கும் வலிகளுக்கும்மேலால் மேவி எழுகிற புன்னகை.அறியு முன்பேநழுவிவிட்ட முகமும் குரலும், சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீஉந்த வாழ்வையும்இந்தச் சாவையும் இனியில்லை உனக்குஇருண்டகாலத்துக் குரல்கள்,நித்திய விடுதலை,சமாதானிக்கட்டும் உனது வெண்மை. இல்லாது போனகருணையின் பாகங்கள் பொருட்டுஇன்னும் கொஞ்சம் கண்ணீர். ஒருநாள் வருவேன்உனது குரல் தொடுகிற தெருவில் மருந்து மணக்காத தாழ்வாரங்களில்குமிழ் எரிகிற இருளில்அவ்வப்போது கொள்கிற மாத்திரைகளில்சரிகிற புத்தகங்களில்கசிகிறதுனது குரல் …

நிஜந்தன் : அஞ்சலி

நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான மூன்று தடவைகளை அழுத்தினேன். மூன்றும் தவறு. தசை நினைவென திறவு இலக்கம் இருப்பது என் வழமை.  கடந்த இரண்டு கிழமையாக எழுதவும் மனநிலை கூரவில்லை. எழுதவும் வாசிக்கவும் மனம் பாய்ந்து கடிப்பதும் பிறகு கைவிட்டு …

கல்விரல் – குறிப்பு

கல்லெடுத்தான் குளம் என்ற ஊரில் இருக்கும் மொட்டு என்றழைக்கப்படும், அரும்பி என இயக்கப்பெயரும் கொண்ட துளசி மற்றும் பொற்புதிர் அவளுக்கும் வீட்டுப்பெயர் தங்கம், இன்னொரு புனைப்பெயர் பெற்றி பூர்ஷ்வா அவர்களையும், போர் மற்றும் போருக்கு பிறகான கல்வி நிலையத்தை மையமாக கொண்டது தான் கிரிசாந் எழுதிய கல்விரல் நாவல். போருக்கு பிந்தைய கல்லெடுத்தான் குளத்தின் முதன்மை எதிரிகள் நால்வர். காட்டையொட்டி இருப்பதால் யானை, பாம்புகள், குரங்குகள். நாலாவதாக இருப்பது பப்பரக்கொப்பான்கள் …

முதற் கனவின் வெம்மை : பிறழ்

முதல் ஆக்கத்தை ஒரு வடிவத்தில் முழுமை செய்து அதை வெளியிடும் தருணம் அரிதானது, முதலாவது என்பதாலேயே. எனது கொடிறோஸ் எனும் குறுநாவலை முடித்த பொழுது உலகின் சிறந்த நூல்கள் இருக்கும் வரிசையில் வைக்கப்பட தகுதி வாய்ந்தது ஒன்றை எழுதி விட்டேன் என உளப்பூர்வமாக நம்பினேன். முதல் நாவலோ குறுநாவலோ கருவளவில் நம்மிடம் உருவாக்கும் தொந்தரவு அபாரமானது. ஒரு எழுத்தாளர் தன் முதற் புனைவில் தான் எதிர்கொள்வதில் மகத்தானது எனும் தொந்தரவை …