சிறு கோட்டு
பொன்னை இன்னொரு பொன் தாழிக்குள் வைத்துப் பாதுகாப்பதைப் போல் ஒரு கவிதையை இன்னொரு கவிதைக்குள் வைத்து விடலாம். அது பழந்தங்கத்தின் நுண்மையான இழைகளைப் புது வார்ப்பினுள் சேகரிப்பதென ஆகும். சங்கக் கவிதைகளை அப்படி எடுத்துச் சொல்லும் வாசிப்பு முறையையே நான் கைக்கொள்ள விரும்புகிறேன். காதலின் எல்லா விதானங்களிலும் சிறகடித்து வளைய வளைய அமரும் பலவகைப் பட்சிகள் போன்றவை குறுந்தொகையின் கவிதைகள். காமத்தின் உன்னதமாக்கலே காதலின் விசையூற்று. சங்கக் கவிதைகள் காமத்தை …
