04: நாத விளி
பதும்மையின் அறைச் சாளரத்தை மாலையின் குளிர் வருடியபடி இருந்தது. மணிக்கதவம் தாழிடப்பட்டிருந்தது. பதும்மை தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருக்கிறாள். விரும்பும் போது வெளியே வருவாள் என முதுபரத்தை அங்கினி வேறுகாடாருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். வேறுகாடார் தாம்பூலத்தை மடித்து முதுபரத்தைக்கு நீட்டினார். அவள் பாதி கடித்து மறுகடிக்கு வாய்திறந்த பொழுது மிகுதியைத் தன் வாயில் போட்டுக் கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தார். அவள் நாணத்துடன் வேறுகாடாரின் பாதத்தில் ஒரு உதை கொடுத்தாள். குளிரான …
