ஆட்டுக்குட்டி சுவேதா
“உன்னுடன் நான் இனிக் கதைக்க மாட்டேன்” என அறுதியிலும் அறுதியாக உலகை நோக்கி ‘மாட்டேன்’ என்பது போல தலையையும் தூங்கு வெண் சிறு செவிகளையும் சிறு கொம்பு முனைகளையும் ஆட்டியபடிசுவேதா என்கிற தூய வெண்ணிறமே உருவான ஆட்டுக்குட்டி இன்று முழுவதும் மெளன விரதம் பூணுவது என முடிவெடுத்தாள். அவளுக்குத் தன் அக்காவான பாலாடை மஞ்சள் வண்ணம் கொண்ட சுகந்தினியுடன் பிணக்கு. சிறிய ஓட்டுக்குள்ளால் நத்தை தலை நீட்டுவது போல மேகங்களுக்குள்ளால் …
