என் தனிமை யானே

அதுவொரு முன்பனிக் காலத்து நள்ளிரவு, உலகு ஒரு நீர்த்திரையென ஆகி ஆகாயத்தின் தாழ்கள் திறந்து கொண்டு பெருமழை துள்ளிக் குதித்து மண்ணிறங்குகிறது. அதிர்ந்து அதிர்ந்து இதயம் நோகுமளவுக்கு இடி கொட்டுகிறது. மின்னல்கள் நீள்முடி கொண்டவளின் கழுவிய முகத்தில் பிரிந்திறங்கும் மயிர்ப்பீலிகளென விரிந்து பரந்தது. காற்றின் ஈரம் உடலுள் நுழைந்து உடலால் வெளியேறிக் குளிர்கிறது. தேகம் தன்னுள் எஞ்சிய உயிர்ச்சூட்டைத் தனக்குத் தானே மூட்டிக் கொள்கிறது. இம்மழைப் பெருக்கில் தன் குடிலில் …

கடைசிச் சில்லறையையும் செலவழித்தல்

ஓர் எழுத்தாளனாக உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்? நான் எழுத்தாளனின்றிப் பிறிதொன்றில்லை என அகமுணர்தல் ஏன்? என சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். ஒரு நாளை எப்படி ஆக்கிக் கொள்கிறேன் என்பதே அவர்களது பலகேள்விகளின் சாராம்சம். ஒரு நாவலாசிரியரோ சிறுகதை எழுத்தாளரோ ஓர் எழுத்தாளராக அன்றாடம் எழுதுவதென்பது அவர்களது வடிவம் சார்ந்த தேவை. ஒரு கவிஞன் எதற்கு இவ்வளவு எழுத வேண்டும் அல்லது அன்றாடம் எழுதித் தான் ஆக வேண்டுமா? …

முத்தித்தழுவி

ஒரு வாழ்கதையின் உச்ச தருணத்தைக் கவிதைக்குள் கதையென நிகழ்த்த இயலும். சபரிநாதனின் இக்கவிதை ஒரு கடலோடியின் கதை. அதனுள் ஒரு கவிஞனான சபரி சென்று தொடக்கூடிய எல்லை என்ன என்பது தான் என்னை ஈர்ப்பது. ஒரு தருணத்தைச் சுழலும் அலைக்குள் மூழ்குபவனைப் போல மூழ்கவிட்டு அலைகடந்த பின் எழுந்து நிற்க வைப்பதைப் போன்ற மயக்கின் நொடிகளை மொழிக்குள் உண்டாக்குவதே கவிஞர் ஒரு கதையைக் கவிதையாக நிகழ்த்தும் பொழுது நிகழ்த்த வேண்டிய …

தீ மல்லிக் கொத்தே!

தன் சிறுவெண் பற்களைத் துலக்கிய பின் ஈறு தெரியச் சிரித்துக் காட்டும் குழந்தையைப் போல ரஜிதாவின் சொற்கள் விரிந்திருக்கின்றன. இவ்விரு கவிதைகளின் வரிகளும் குழந்தையின் அளந்தெடுத்த பல்முத்துக்கள். சொல்லிணைவுகளில் உள்ள பித்துநிலை கவிதையை வைர ஊசிகளென மினுக்குகின்றது. பொற்சிலைகருவிருந்த மலை படியளந்தாய் நீல இரவின்பனிப்படிவு துளிரும் அன்றிலும்தீரத் தீர செவ்விதழ் பொழி சாலை. * பற்றியவான் திரி சுண்டுவிழிப் பிரம்புபாய வேட்டைநாய்உறுமும் சிரை. எரிஎன்னை தீ மல்லிக் கொத்தே! ரஜிதா

சுகந்தமும் வியர்வையும்

எப்பொழுதாவது பனிக்கட்டி வலுவுடன் நீர்க்கல் பெருக்கென இம்மண்ணில் மழை விழுவதுண்டு. அம்மழை எந்த இடைவெளியிலும் கோடை வெளிவரக் காத்திருக்கும் புழுக்கத்தின் மேல் குளிர்க்கால்களால் நடந்து இவ்வெளியை ஈரம் பரவவிடும். வெண்ணொளிச் சாளரமென வானத்தைத் திறந்து அடைக்கும் மின்னல்கள் துலங்கும். காற்று அளைந்து எடுத்து வரும் மலர்களின் சுகந்தத்தில் நிகழும் கூடலில் பெருகும் வியர்வையை விடச் சுவையானதை உடலறியுமா! மோசிகீரனாரின் கவிதையொன்றில் பெயர்த்தனென் முயங்க யான்வியர்த்தனென் என்றனள்,இனி அறிந்தேன் அது துனி …

செயற்களம் புகுவோருக்கு: 03

அரசியல் வெளியை ஆக்குதல் ஈழத்தில் ஆயுத விடுதலைப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் முகிழ்த்த முதல் தலைமுறை செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட வெளியென்பது யுத்தத்தில் வெற்றி பெற்ற சிங்கள பவுத்த பேரினவாதக் கருத்துகளை முதலீடாக்கிய அரசின் தொடர்ந்த கண்காணிப்பையே. எங்கு கூட்டமென்றாலும் போராட்டம் என்றாலும் களச் செயல்களென்றாலும் முதலில் வரும் விருந்தினர்கள் அரச புலனாய்வாளர்களே. செயற்படுபவர்கள் அரசிற்கு எப்பொழுதும் ஆபத்தானவர்கள். அவர்களே சமூகத்தின் முன்னேறிய அரசியல் பிரிவினர் என்பதை …

மணி மருள் பூ

காத்திருப்பின் மென்னொலிக்கு அதிராத காதலுள்ளங்கள் உண்டா!கொல்லன் அழிசியின் இக்கவிதையில் கருநொச்சி விழும் ஓசை கேட்குமளவுக்கு உள்ளம் தன் அனைத்துப் புலன்களையும் காதுகளக்கிக் கொண்டு விழித்திருக்கும் தவிப்பில் எழுவது எது! கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,எம் இல் அயலது, ஏழில் உம்பர்மயிலடி இலைய மா குரல் நொச்சிஅணி மிகு மென் கொம்பு ஊழ்த்தமணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. இப்பெரும் ஊரில் யாவரும் உறங்கினாலும் எமக்குத் துயில் விழவில்லை. நள்ளிரவில் …

எங்கிருந்து பார்ப்பது

யாழ்ப்பாணத்தில் நடந்த இமிழ் கதைமலரின் அறிமுக நிகழ்வில் நான் ஆற்றிய உரை இலக்கியச் சூழலில் வாழ்த்தப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. வாழ்த்துகளை ஒருபுறம் வைத்து விட்டு, விமர்சனங்களையும் கேலிகளையும் சில அன்பான பரிந்துரைகளையும் கவனத்தில் எடுக்கலாம். முதன்மையாக எழுந்த சிக்கல் எனது திமிர்த்தனமான தெனாவெட்டான இலக்கிய ஞானம் சொட்டுகின்ற உடல்மொழி. சிலரால் கேலியாகவும் சிலரால் அன்பான முறையில் பணிவற்றதோ அல்லது அவையடக்கமற்றதாகவோ கருதப்படுகிறது. எனது கவிதைகள் சில உள்ளடக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பான …

சூடுதல்

முன்னொருநாள் ஒரு தெருக்கூத்திற்காக மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். எனது மாணவியொருத்தி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த உடைந்த கற்தூணில் அமர்ந்திருந்தாள். என்ன பிரச்சனை என்று கேட்டேன். இல்லை சேர், எனக்கு என்ர பேர் நல்லமில்லை எண்டு கவலையா இருக்கு. எல்லாருக்கும் எவ்வளவு ஸ்டைலா பேர் வைச்சிருக்கினம். எனக்கு இப்பிடியொரு பெயர் வாய்த்துவிட்டது என வருந்தினாள். அவளுடைய பெயர் எத்தனை மிகவும் அரிதான ஒன்று, எவ்வளவு நீண்ட தொடர்ச்சியில் …

துளித்தீகள்

ஒரு காட்சித் துண்டு கவிதையென ஆவதுண்டு. காண்பதை வேறொரு உச்சியில் அறியும் அகக் கண்கள் உள்ளவர்களே கவிஞர்கள். மடலூர் கிழாரின் கவிதையொன்றை வாசித்த பொழுது மனதுள் எழுந்த துண்டுப் பரவசம் இன்னொரு சொல்லில் எழ வைக்க முடியாதது. காட்சியின்பமாகவே ஆகும் வரிகள் அவை. சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழிவான்மீனின் வயின்வயின் இமைக்கும்ஓங்குமலை நாடன் சாந்து புலர் அகலம்உள்ளின், உண்ணோய் மல்கும்,புல்லின் மாய்வது எவன் கொல்அன்னாய்? தொலைவில் பரண் மீது …