‘குக்கூ’ சிவராஜ் – ஒரு விருது
சிவராஜ் அண்ணனை ஒரு முறையாவது நேரில் கண்டு தேம்பத் தேம்பச் சிரித்து கட்டியணைத்து நெஞ்சுடைய தழுவிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். அவர் நம் காலத்தின் பேரறத்தின் ஆன்மா கொள்ளும் தீரா அலைச்சலும் மாபெரும் உத்வேகமும் கொண்டவர். அவரைப் போல முற்றிலும் நேர்மறையான ஆளுமையை என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. ஒருமுறை கூட நேரில் பார்க்காத, எங்கோ இவ்வளவு தொலைவில் இன்னொரு தீவில் இருக்கும் எளிய எழுத்தாளனுக்கும் சுரக்கும் பரிவு அவர். …
