பொன் வாள்

மொழிக்குள் சில கவிஞர்கள் அரிதான ஒருங்கிணைவுகளைப் பெறுவார்கள். ஒரு மக்கள் திரளின் கூட்டு மனத்தின் பொன் வாளென அவர்களது கவிதைகள் திரண்டு வருவன. அவை போருக்குரியவை அல்ல. அம்மக்களின் அகத்தின் ஒவ்வொரு இழைகளும் நுட்பங்களும் உருகித் தங்கமென வழிந்து, பரவி, இறுகி, பிடியிடப்பட்டு, கூர் தீட்டப்பட்டு தகதவென மின்னி உறைபவை. சேரன் ஈழத்தின் நிலத்தையும் அகத்தையும் மொழியுள் திகழ வைத்தவர். அவரின் நிலக்காட்சிகளின் அவதானிப்புகள் பலநூறு வரிகளின் மூலம் ஈழத்தை …

நன்றியின் நிழல்: ஒரு குறிப்பு

வாழ்க்கைக்குத் திரும்புதல் கிரிசாந்தினுடைய முதலாவது கவிதைத் தொகுதி, குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வந்திருக்கிறது. முகநூலிலும் பிற ஊடகங்களிலும் நாளாந்தம் கவிதைகள் என எழுதப்படுகின்றவற்றில் எது கவிதை எனத் தேடிச் சலிக்கின்ற கவிதை மனங்களுக்கு ஆத்மார்த்தமான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக இதில் உள்ள அகம் சார்ந்த கவிதைகள், நிஜ உலகின் நிகழ்வெளியில் நின்று மனதைப் பிய்தெடுத்து ஒரு தனித்த வெளியில் மனதை மிதக்க விடுகின்ற பித்து …

ஒரு குட்டி நட்சத்திரம்

மொழிக்குள் அரசியல் பிரக்ஞை உள்நுழைவது கத்தியால் அதன் இதயத்தைக் கீறி அதை மீளத் தைப்பதைப் போன்றது. அதன்பின் அதுவரையான மொழியுடல் வெட்டப்பட்ட மரமொன்று மீளத்துளிர்ப்பதைப் போல, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கின்றது. சிவரமணியின் கவிதைகள் மொழிக்குள் சீழ்பிடித்திருந்த ஆணாதிக்க சமூக ஒழுங்கைக் கத்தியால் வெட்டியகற்றும் எத்தனமும் கூர்மையும் கவித்துவ ஒருமையும் கூடியவை. பெண்ணுளம் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளை தன் கவித்துவ வீச்சால் சொக்கப்பனை கொழுத்த முன் இரண்டே வெட்டில் மூன்றாய் …

ஏறி வருதல்

உலகம் முழுவதிலுமுள்ள வணிக சினிமா என்பது கேளிக்கையினூடாகவும் மிகைப் புனைவுக் காட்சிகளின் ஊடாகவும் பெரும்பான்மைப் பார்வையாளர்களின் பார்வைக்குள் சலனங்களை ஏற்படுத்துவதை வெற்றிகரமாகச் செய்வதையே வணிக சினிமாவின் வெற்றியாக ஈட்டுகின்றன. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான ஈழத்து சினிமாவின் முழுநீளத் திரைப்படங்களை அவை உருவாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே ஒரு பார்வையாளராக நெருக்கமாக அவதானித்து வருகிறேன். ஒவ்வொரு சிறு வெற்றியும் முன்னேற்றமும் என்னை உவகை கொள்ளச் செய்திருக்கிறது. அது ஒரு திரளின் கனவும் இந்த …

நூல் பிறையளவு கொடை

கசந்து வெண்ணிறமாகப் புன்னகைக்கும் மொழி பிரான்சிஸ் கிருபாவினுடையது. மொழி ஒரு கோப்பை வைன் என்றால் அதன் ஆயிராமாண்டு காலத் துயர் பிரான்சிஸின் சொற்களில் வடியும் கைப்பு. வாழ்வின் உவர்ப்பளிக்கும் அந்தரத்துடன் கத்திக் கொண்டு எதிர்ப்படும் மொழி, பைத்தியம் நிறை சொற்களால் இன்னொரு அகத்தை கையில் பற்றி உலுப்பி அறைந்து நீதி கேட்பவை. நீங்கள் ஏன் என்னைக் கைவிட்டீர் என்று ஒவ்வொரு கைவிடலுக்கும் ஒவ்வொரு விலக்கத்திற்கும் காரணம் கேட்பவை. பின்னர் தன்னைத் …

வாழ்க்கைக்குத் திரும்புதல்: 12 புத்தகங்கள்

எனது முதற் கவிதைத் தொகுப்பு குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வெளிவந்திருக்கிறது. நூல் வடிவமைப்பு மற்றும் அச்சாக்க உதவிகளைக் குக்கூ சிவராஜ் அண்ணாவும் சந்திரசேகர், பாரதி முதலிய குக்கூவின் நண்பர்கள் தொடக்கம் பெயரறியாத பலரும் இவ்வெளிவரவுக்கு உதவினர். உள் வடிவமைப்பினை கல் ஆலும், அட்டைப்பட வடிவமைப்பினை இரா. தியாகராஜனும் வடிமைத்திருக்கிறார். தன்னறம் வெளியீடுகளின் அச்சு நேர்த்தியும், நூலுருவாக்க ஊழ்கமும் நான் பெரிதும் மதிப்பது. தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்குப் புத்தகங்களைச் சேர்க்க …

ஆகுதல்

எங்கோ நான் எரிவது நீ பார்க்கத் தானெனஒளிரும் நட்சத்திரம் இவ் வாழ்க்கை. எங்கோ நான் அலைபடுவதுஉன் கண்களில் விழ. எங்கோ எனது பெயர் சல்லடையாக்கப்படுவதுஉன்னில் ரணமென விழுந்த புண்ணைவடுவாக்க. அழியாமல் உன்னில் வாழும் வேட்கையைஅழியாமல் பாதுகாக்கநான் விசும்பென ஆவேன். (2024)

வசைவெளிக் கண்ணிகள்

புத்தர் தன் சீடர்களுடன் ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் இனிப்புகளையும் சுவையான உணவுகளையும் கொணர்ந்து புத்தருக்கு அளிக்க முயன்றனர். புத்தர் அவற்றை ஏற்க மறுத்தார். அம்மக்கள் அவற்றைத் தாங்களே திரும்ப எடுத்துக்கொண்டு சென்றனர். அடுத்த கிராமத்திற்குள் நுழைந்த போது அங்கிருந்த மக்கள் புத்தரை வசைகளாலும் கெட்ட வார்த்தைகளாலும் ஏசிக் கொண்டிருந்தனர். புத்தர் அமைதியாகச் சென்று கொண்டிருந்தார். அவரது சீடர்களுக்குத் தாங்க முடியாத கோபம் ஏழுந்தது. …

எரியும் ஒரு பிடிப் பிரபஞ்சம்

மனதின் உள்ளிணைவுகள் தீவிரங் கொண்டு மொழியை மோதுகையில் சிதறும் நட்சத்திரத் தீற்றல்கள் என மொழியில் பட்டுத் தெறித்தவை பிரமிளின் கவிதைகள். பிரபஞ்சம் என்பது ஓர் பருவெளி. அதன் நிறக்கோலங்கள், கருவிடை வெளிகள், காலங்கள் அமிழாமல் உறையும் துளைகள், தூசுகள், கிரகப் பாறைகள் என்று அளவிலாத பருக்களின் விரிவெளியெனப் பரந்து நிற்பது அது. மனித மனத்தின் உட்சாரமும் பிரபஞ்சத்தின் பருச்சாரமும் ஒன்றின் இன்னொரு வடிவங்களென ஆகுவது இத்தன்மைகளாற் தான். பிரமிள் மொழிக்கூட்டின் …

மகத்தான மாகளிறு

தமிழ்க்கவிஞர்களை ஒரு யானைக் கூட்டமென்று கொண்டால் மொழிக்காட்டில் அலையும் இக்கூட்டம் அதன் மூதறிவைச் சுமப்பவை. தம் உணர்கரத்தால் திசைகளையும் நறுமணங்களையும் உள்ளீர்ப்பவை. பித்தேறி வெருண்டு காட்டைப் புரட்டுபவை. அக்கூட்டத்தின் மகத்தான மாகளிறுகளிலொருவர் மனுஷ்ய புத்திரன். மொழியை மிக நீண்ட புனைவுப்பரப்பென ஆக்கி நாவல்களுக்கு நிகரான உரையாடற் பரப்பைத் தனக்குள் கொண்டது அவரது கவியுலகு. எத்தனை நூறு மகத்தான வரிகளை அவர் ஆக்கியளித்திருக்கிறார். சிலவேளைகளில் மண்டியிடுகிறார், சிலவேளைகளில் தூக்கிப் போட்டு மிதிக்கிறார், …