11: உருகம் எழல்
பாணர் குழுவொன்று புயலில் வீழ்ந்து கிடக்கும் மரமொன்றை மான் கூட்டமொன்று தாவிக் குதித்துச் செல்வது போல் வாகை சூடனைத் தாவிச் சென்றது. கால்களின் சத்தங்கள் குளம்பொலிகளென தன்னுள் எதிரொலிக்க மயக்கிலிருந்து கண்விழித்தான். நிலவு சரிந்து தாழ்ந்து போய்க் கொண்டிருந்தது. விழிகள் திறந்து கொண்டதுமே சுற்றி அலைந்த யாழிசையின் கூவல்களும் விறலியரின் தீங்குரல் பாடல்களும் பாணர்களின் உளறல்களும் அவனைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின. மதுச் சாலைக்கு முன்னிருந்த நெருப்பினருகில் போர்வீரர்கள் குழுவொன்று …
