முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் : JNU
இம்முறை மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மே 18 நினைவு கூரலினைச் செய்திருக்கிறார்கள் அங்குள்ள தமிழ் மாணவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்தா ஜே என் யுவில் படித்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருக்கும் தமிழ் மாணவர்கள் நினைவு கூரலினைச் செய்ய விரும்பியிருந்தார்கள். அங்கு அப்பொழுது படித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டு மாணவர்களும் பிரிந்தாவும் சிங்கள ஆற்றுகைக் கலைஞரான பிரபுத்தாவும் இணைந்து நினைவு கூரலினை ஒழுங்கு படுத்தியிருந்தார்கள். …
