கொடிறோஸ் : முதல் ஈழத்து வாசகர் கடிதம்
வணக்கம் கிரிசாந், உங்கட குறுநாவல் ஆகிய கொடிரோஸ் வாசித்தேன். நாவலை பெற்றதும் என்னால் வாசிக்க முடியவில்லை. இப்பொழுது தான் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் நாவலை வாசித்து முடித்து விட்டேன். மிகவும் அருமையான நாவல் ஒன்று. இந் நாவலானது மிகவும் சுவாரசியமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் வாசிக்கும்போது எங்களை அறியாமலே அந்த நாவலுக்குள் சென்று அங்கே நடப்பதை எல்லாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு அந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. …
