எழுநா – புத்தக மன்றம்

எழுநா இதழும் அவர்களது பதிப்பகமும் ஈழத்தை மையமாகக் கொண்ட ஆய்வுகளையும் வரலாற்று உரையாடலையும் தொடர்ச்சியான செயலூக்கத்துடனும் முறையான ஒழுங்கமைப்புடனும் நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களது புத்தக மன்றம் செயற்பாட்டில் இணைய விரும்புபவர்கள் கீழ்வரும் வகையில் அவர்களது பெருஞ்செயலுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கலாம். * ‘ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறார். வாசகர்கள் அதை முழுமைப்படுத்துகிறார்கள்’ எழுநா புத்தக மன்றம், வருடாந்தச் சந்தாவை அடிப்படையாகக் கொண்டது. இதில் இணைவதன் மூலம் எழுநாவின் …

‘கனவே திறந்து விடு, உன் கதவை’  

(கருணாகரன்) ‘இந்த உலகம் நம் முன் கற்களால் எழும்புகிறது’ கிரிசாந் எழுதிய ‘பால்யம்’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். ஏறக்குறைய இதையொத்ததாகவே சிவரமணியும் எழுதினார். ‘…இரவு; இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்; நாளைக் காலையில் சூரியன் உதிக்குமா என்பதில் கூட சந்தேகம் கொண்டுள்ள என்னிடம் கனவுகள் தம் அர்த்தத்தை இழந்தவைதான்..’ ‘… வெளியே பதற்றமற்று மௌனமாய் நிற்கும் மரங்களின் நிழல்கள் கீழே கிழிந்து போயுள்ளன…’ …

கொடிறோஸ் – குறிப்பு

ஈழத்திலிருந்தும் புலத்திலிருந்தும் வெளிவரும் பிரதிகளின் பொருண்மை மீதான இலக்கிய மடங்களின் குற்றம் கடிதலாக இருப்பது அவற்றின் “போர்க்காலம் மீதான காதல்”. சுமார் முப்பது வருடங்களை போருக்குள் தொலைத்த சமூகத்துள்ளிருந்து வரும் பிரதிகளின் இயல்பூக்கமாக “எதிர்கொள்ளும் யதார்த்த இயங்கியலை எழுதுதல் ” அமைந்திருந்தமை, குற்றம் கடிதலுக்கான எதிர்வினை. எழுத்து ஒரு இயக்கமாக தொடர்கின்றபோது, கடத்தலும் அதன் இயல்பாக கைகூடுகின்றது. அந்தவகையில் ஈழ எழுத்தாளர்களின் பிரதிகளில் “போரினை கடத்தல்” என்பதும் காலத்தோடு முகிழ்வதை …

வாசிப்போர் மனங்களை பற்றிப் படர்கிறது ‘கொடிறோஸ்’

25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாணத்தின் சமூக வாழ்வை அதன் கலாசார சூழல், ஆசாரம், அறிவு, அறிவீனம், நிறைவு மற்றும் போதாமைகள் என்பவற்றை மிகவும் இயல்பாக வாசகர் மனதில் மனதில் பதிய வைப்பதில் கிரிசாந் வெற்றி பெறுகிறார். பல எழுத்தாளர்கள் யாழ்ப்பாண சமூக வாழ்வியலை தங்கள் நாவல்களின் எழுதியிருந்தாலும் நவீனமும் பழமையும் கலந்த கவித்துவம் செறிந்த அதே நேரம் எந்த நிலை வாசகரையும் சலிப்படையச் செய்யாத ஒரு தேர்ந்த மொழிநடையில் இது …

அடிப்படை வாசகர்

கொடிறோஸ் குறுநாவலுக்கு வாசகர்கள் எழுதிய குறிப்புகளில் ஒன்றில் வாசக வகைகள் பற்றி எழுதியிருந்தேன். அதில் எனக்கு அனுப்பப்படும் கடிதங்களில் தோன்றுபவர்கள் அடிப்படை வாசகர்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் கொடிறோஸ் கொடுக்கும் புனைவு இன்பம் சார்ந்த நோக்கிலேயே கதையை அணுகியிருக்கிறார்கள். அதில் ப. பார்தீயும் மாக்கியும் எழுதிய குறிப்புகள் தீவிர வாசக நிலைப்பட்டவை. ஒரு புனைவை அதன் வெளிக்கு மேல் தன் கற்பனையால் வளர்த்துச் செல்லும் எத்தனம் கொண்டவை. அடிப்படை வாசகர், …

கொடிறோஸ் – குறுநாவல் ஒரு பார்வை

கொடிறோஸ் என்ற குறுநாவல், ஈழத்து எழுத்தாளர் கிரிசாந்தின் இரண்டாவது படைப்பாக ஆட்காட்டி வெளியீடாக வெளிவந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு, ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் மீண்டும் உரையாடலுக்குரிய ஒரு கதை உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் பேசப்பட்ட ‘புலி எதிர்ப்பரசியல் – புலி ஆதரவரசியல்’ என்ற இருபாதையான அரசியல் அணுகுமுறைகள் இலக்கியத்தில் பிரதிபலிக்கப்பட்டன. ஆனால், அவை புனைவுலகில் புதிய மொழியை உருவாக்கவில்லை. அந்தப் படைப்புகள் பெரும்பாலும் பக்கச்சார்பான விமர்சனங்களோடு மட்டும்தான் அணுகப்பட்டன. இதன் …

கொடிறோஸ் – வாசக வகைகள்

கிரிசாந் கொடிறோஸ் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே புத்தகத்திற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். வாசித்த பின் ஒரே ஒரு ஏமாற்றம் குறு நாவலாக இல்லாமல் நாவலாக இருந்திருக்கலாம் என்பதாகும். நான் தீவிர இலக்கியத்திற்கு புது வாசகன். சில மாதங்களாக தொடர்ந்து நாவல்களையே வாசிப்பதனால் எனக்கு அப்படித் தோன்றி இருக்கலாம். கதையின் வெளிப்பாடு பற்றி தர்மு பிரசாத் பதிப்புரையில் குறிப்பிட்ட குறுநாவலின் தன்மையை போலவே பல சிறுகதைகளின் தொகுப்பு போலவும், நாவலின் ஒரு …

கொடிறோஸ் – சிறு குறிப்புகள்

கொடிறோஸ் குறு நாவல் படித்து முடித்தேன். குடும்பத்திற்குளிருத்து சமூகத்தை விரித்த விதம் பிடித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் நல்ல புத்தகம் படித்த திருப்தி. தொடருங்கள் உங்கள் பணியை. என் அன்பும் பாராட்டுகளும். ப. பார்தீபன் 22-05-2025 * ஈழத்திலிருந்து ஒரு புதிய குரல். மயக்கும் மொழியை கைவரப் பெற்றிருக்கிறார். ஈழத்து வாழ்க்கையின் யதார்த்தமான ஒரு சில பகுதிகளை இயல்பாக கொண்டுவந்திருக்கிறார். இன்னும் பேச எவ்வளவோ இருக்கிறதே, அதெல்லாம் எப்போது என்ற …

கொடிறோஸ் – கடிதம்

தங்கள் கொடிறோஸ் குறு நாவல் வாசித்தேன். கைக்கு அடக்கமாக, அட்டை வடிவமைப்பு கூட அதன் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அட்டையை திருப்பியதும் அந்த மேற்கோள் “எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒரே மாதிரியானவை. ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதனதன் வழியில் தனித்த துக்கமுள்ளவை” எவ்வளவு யதார்த்தம். அதனைப் பார்த்ததுமே உடனடியாக வாசிக்கும் ஆர்வம் என்னையறியாமல் தோன்றியது. நேற்று ஒரு மணித்தியாலமும் இன்று முப்பது நிமிடங்களும் கொடி றோஸ் என்னுள் மலர …

முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் : JNU

இம்முறை மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மே 18 நினைவு கூரலினைச் செய்திருக்கிறார்கள் அங்குள்ள தமிழ் மாணவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்தா ஜே என் யுவில் படித்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருக்கும் தமிழ் மாணவர்கள் நினைவு கூரலினைச் செய்ய விரும்பியிருந்தார்கள். அங்கு அப்பொழுது படித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டு மாணவர்களும் பிரிந்தாவும் சிங்கள ஆற்றுகைக் கலைஞரான பிரபுத்தாவும் இணைந்து நினைவு கூரலினை ஒழுங்கு படுத்தியிருந்தார்கள். …