பொலிக!

மானுடருக்கு கலையும் இலக்கியமும் எதை அளிப்பதற்காக மண் நிகழ்கின்றது என்பதும் எதன் பொருட்டு என்பதும் பல முதன்மையான கலைஞர்களால் சொல்லப்பட்டே வருவது. ஜெயமோகனே குறைந்தது ஆயிரம் உவமைகளால் சொல்லியிருப்பார். இன்று இந்தக் காணொலி இன்னொரு உவமையிலிருந்து தோன்றுவது. பொலிக என ஆணையிடுவது!

ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு

பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர, சூழலை நீங்கி வாழ முடியாது. இங்கே சுவேதா என்ற ஆட்டுக்குட்டியின் உலகமே கதையாகியுள்ளது. அந்தக் குட்டி வாழ்கின்ற சூழலில் உள்ள மனிதர்கள், நாய்கள், …

ஆகப் பெரிய கனவுகள்

கடந்த வருடம் தும்பி சிறார் இதழ்நிறுத்தப்பட்ட செய்தி வெளியாகிய போது அதன் பயணத்தைத் தொடருபவர்கள் அடைந்த இழப்புணர்வும் துக்கமும் தும்பி எனும் மகத்தான கனவினை நீங்குவதன் துயரே. இவ்வருடம் தும்பி இதழ் மீளவும் சித்திரை முதல் நாள் வெளிவரும் எனும் பெருமகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. தும்பி மீளவும் பறக்கும் என்பதை ஆழத்தில் ஒரு குரலாய் என்றும் அறிந்திருந்தேன் என எண்ணுகையில் வியப்பாயிருக்கிறது. மகத்தான கனவுகள் அப்படித் தான். பெருந்துயர்களை அடைந்து …

முக்காலமும்

நட்சத்திரங்கள் உதிராத வானமுண்டுநீலம் கலையாத ஆழிகளுண்டுமீன்கள் வாழும் மலைகளுண்டுநிலவும் சூரியனும் பருவங்களுமுள்ளன தூண்டிலைப் பிடித்திருப்பவர்ஒரு நூற்றாண்டு காத்திருக்கிறார் பிறகு விழித்துக் கொள்கிறார்ஒரு மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் போல. ஓயாது புலரும் பொழுதுகளுக்கும் அணைபவற்றுக்கும் இடையில்எரியாது சுடரும் சுடர்பூத்திருக்கிறதுமுக்காலமும்.

அந்த ஆறு நிமிடங்கள்

தன்னறம் விருது விழாவில் ஷோபா சக்தி ஆற்றிய தன்னுரை வெளியாகியிருக்கிறது. ஈழத் தமிழர்களில் எவரேனும் ஒருவர் அதைப் போன்ற ஒரு நன்றியுரையை வழங்க இயலுமா என எண்ணிப் பார்க்கிறேன். வாய்ப்பேயில்லை. அந்த ஆறு நிமிடங்களென்பவை ஷோபாவின் உலகில் அன்றாடங்கள். எங்கள் நிலத்தின் அசல் முகம்.

தினசரி வாழ்வின் கவித்துவம்

தேவதச்சனின் கவிதையுலகிற்குள் என்னால் நுழைந்து அதில் வாழ முடிவதில்லை. இன்னொரு உலகு என்ற எண்ணமே இப்போதுமிருக்கிறது. சபரிநாதனின் இந்த உரை தேவதச்சனின் கவிதையுலகை அதற்கு வெளியே இருப்பவர்களும் தொட்டு உணர்ந்து கொள்ளும் படி படர்கிறது. சபரி நிறையப் பேச வேண்டும் என எண்ணுகிறேன். கவிதைகளை அதன் ஆழங்களிலிருந்து ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

ஆட்டுக்குட்டி சுவேதா

“உன்னுடன் நான் இனிக் கதைக்க மாட்டேன்” என அறுதியிலும் அறுதியாக உலகை நோக்கி ‘மாட்டேன்’ என்பது போல தலையையும் தூங்கு வெண் சிறு செவிகளையும் சிறு கொம்பு முனைகளையும் ஆட்டியபடிசுவேதா என்கிற தூய வெண்ணிறமே உருவான ஆட்டுக்குட்டி இன்று முழுவதும் மெளன விரதம் பூணுவது என முடிவெடுத்தாள். அவளுக்குத் தன் அக்காவான பாலாடை மஞ்சள் வண்ணம் கொண்ட சுகந்தினியுடன் பிணக்கு. சிறிய ஓட்டுக்குள்ளால் நத்தை தலை நீட்டுவது போல மேகங்களுக்குள்ளால் …

இளம் எழுத்தாளர்களுக்கு

ஓர் இளம் எழுத்தாளனாக இலக்கியம் அளிக்கும் சவால்களை ஓயாது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அறிதலின் இன்பம். எழுதுதலின் குன்றாத வேட்கை. ஜெயமோகனின் இந்தக் காணொலி இளம் எழுத்தாளர்கள் பற்றியிருக்கும் அவநம்பிக்கையையும் சலிப்பையும் அதிலிருந்து மீளும் வாசல்கள் பற்றிய திறப்புகளையும் சுட்டுவது. அறிதலும் காலமும் மாறிக்கொண்டேயிருப்பது. காலத்தைப் போலவே அறிதலும் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு மட்டுமே முன்னேறக் கூடியது. அண்மையில் வாசித்த கற்றலைப் பற்றிய ஜெயமோகனின் சில வரிகளும் இக்காணொலியின் சவால்களை …

அகவிழி : ஆவணப்படம்

அகவிழி ஆசிரியையான சரஸ்வதி அவர்கள் நான்கு வயதிலிருந்தே கண்பார்வை இல்லாதவர். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக, மேல்நிலை வகுப்பு (11 மற்றும் 12) மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடம் போதிக்கிறார். பிரெய்ல் முறையில் கற்பிக்கும் அகவிழி ஆசிரியை இவர். தன் வாழ்வில் இதுகாறும் தான் கடந்தவந்த வாழ்வுச்சூழ்நிலைகள் குறித்தும், தனக்கும் தன் அம்மாவுக்குமான உறவு குறித்தும் அவர் பேசுவதனைத்தும் நம்மை நெகிழ்வில் …