49: ஆடி மயில்

திருதிகா தோழிகளுடன் மாற்றுடை அணிந்து தன்னைக் குடிகள் அறியாத வண்ணம் உருமாற்றிக் கொண்டாள். மன்றுக்குச் செல்லும் பெருவீதியால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வண்ண பேதங்களை நோக்கிக் களிச்சிரிப்பாடினர்கள் தோழியர். திருதிகா ஒவ்வொன்றையும் தொட்டு எடுத்து நோக்கினாள். ஒவ்வொரு ஆடியிலும் தன்னை உற்றாள். ஒவ்வொரு குழவியிலும் அதன் விழிகளையும் விளையாட்டுகளையும் நோக்கினாள். அவர்களின் கால்களிலும் கரங்களிலும் துள்ளியமையும் நடனத்தை புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். கருவண்ணக் குழந்தைகள் தேவர்களென நின்றாடின. மாந்தளிரும் …

48: புரவிக் கால்

மகாசேனன் கருநிறப் புரவியின் குளம்படிகள் மண்ணை உந்தி விசை கொண்டு கடற்கரையின் வெண்மணலை உழுது செல்லுவதை நோக்கியபடி கடிவாளத்தைப் பற்றியிருந்தான். இளஞ் சூரியன் கடலிலிருந்து எழுந்து பொன் நாணயமென உயர்ந்து கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து எழுப்பும் ஒலிகளால் கலங்களும் தெப்பங்களும் அசைபவை போல கரைக்கடலில் ஆடியபடியிருந்தன. தென்னைகளின் தோகைகள் காற்றில் விரிந்தும் தாழ்ந்தும் கரையை விசிறின. பரதவக் குடிகளுடன் ஏராளமான பிற குடியினரும் கலந்து கரையெங்கும் களிக்கூச்சல்கள் எழுந்தன. கள்ளும் …

47: மாகதா : 02

மடாலயத்தில் உணவு சமைக்கும் வாசனை எழுந்து புகையின் இன்மணம் காற்றில் வீசிக் கொண்டிருந்தது. மாகதா இளம் பாணனின் மெல்லுடலை நோக்கியபடியிருந்தார். அவனுள் சுழிக்கும் உடலசைவுகள் நிரந்தரம் என்பது போல் தோன்றியது. இளையவர்களிடம் தோன்றும் மிதப்பிற்கும் கனவுகளுக்கும் அப்பால் துயர் கொண்டிருப்பவன். துயரை அனுபவிப்பவர்களை விடச் சொற்களால் அறியும் நுண்கரங்கள் கொண்டவர்களின் துயர் ஆயிரமாயிரமாய் பெருகுவது. சொற்கள் எண்ணிக் கலையும் மேகங்களென தோன்றுவது. பின் எங்கிருந்தோ ஒரு காற்றின் திசையில் அதை …

46: மாகதா

“உங்கள் சொற்கள் எதன் பொருட்டு எழும் பாணரே” என அமைதியில் எழும் நதியலையென ஒலித்த குரலில் கேட்டார் மகாசோதி. நீண்டு தடித்த பேரரச மரத்தில் நலுங்கிக் கொண்ட ஆயிரமாயிரம் இலைகளின் தளும்பல்களின் கீழ் பனையோலையால் இழைக்கப்பட்ட நீள் பாயில் ஊழ்கத்தில் உடலமைத்து அமர்ந்திருந்தார். அவர் விழிகளில் ஒரு குறுஞ்சிரிப்பு நித்திய கல்யாணி மலர்களை இளம் பாணனுக்கு நினைவூட்டியது. காற்று தேகத்தை உரசி அமைதி அமைதியென ஒலிப்பது போல் கேட்டது. அவரின் …

45: சிம்ம நிழல்

நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் விம்மியெழுந்த புழுதியின் தூசுகள் அவ்வொளித் தூண்களில் பரவி ஒளித்தூசென மின்னின. புரவிகளின் கனைப்பொலிகளும் அவை கால்மாற்றிக் கொண்டு நிற்கும் ஓசைகளும் எழுந்தன. நிரையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டில்களில் இருந்த காளைகளின் கொம்புகளில் கட்டியிருந்த சலங்கைகள் …

வாழ்க்கைக்குத் திரும்புதல்

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை வாங்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் எனது மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப் மூலமோ தொடர்பு கொண்டு தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் பெற்றுக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் அனுப்பிய பின் பற்றுச் சீட்டை மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப்பிலோ உங்கள் முகவரியுடன் இணைத்து அனுப்புங்கள். தபால் மூலம் புத்தகம் உங்களிடம் சேரும். நூலை வாசித்த …

44: ஓயா மழை : 02

“மழைப் பொழிவு இருட்டில் வைரத் துளிகளென எங்கள் மீது கொட்டிக் கொண்டிருந்தது. மேனி மயங்கிக் கிடந்த என்னைத் தன்னிரு கரங்களில் இளங் கன்றை ஏந்துவது போல் தூக்கிக் கொண்டார். கருவறையின் முன்முக மண்டபத்தில் சில அகல்கள் தழலாடின. எனது விழிகள் பாதி சரிந்து தூங்கின. என்னை ஏணையில் வளர்த்துபவர் போல கற்தரையிலிருந்த அன்னையின் பழைய செவ்வாடைகளின் மேல் வளர்த்தினார். தேகம் குளிரால் விறைத்து நடுங்கிக் கொண்டிருந்தது. சிறு பொதி மூடையிலிருந்து …

43: ஓயா மழை

காலை பரபரவென விடிந்து கொண்டிருப்பதை அங்கினி நோக்கியபடி உவகையில் முகம் விரிய நின்றாள். விழவுக் காலங்களில் உளம் கசப்பை அடைய முயலும் போதெல்லாம் தேன்வழுகும் பாறையில் நிற்கும் தேரையெனத் தன்னை உணர்வாள். வழுக்கிச் சென்று காமத்தின் வாயில் விழுந்து கொள்வாள். உடலை விழைவின் கலமென ஆக்குவதை அவள் தன் அத்தைகளிடமிருந்து கற்றாள். பட்டினத்தின் பரத்தையர் வீதிகளில் அங்கினியினுடையது கடைசி இல்லம். நாகதேவிக் கோவிலின் காட்டு விளிம்பில் அமைந்திருக்கிறது. அவளது இல்லத்தின் …

42: இருட் குழவிகள் : 02

“மானுடர் தம் சொந்த நிழல்களைச் சந்தேகிப்பவர்கள் கூத்தரே. இளமையில் நாம் எண்ணும் கனவுகள் மெய்போலத் தோன்றுபவை. அணுகும் தோறும் காதல் கொண்ட பெண் காதலைப் பூரணம் என எண்ணுவதைப் போல் தோற்றமளிப்பவை. அவை நீடிக்கும் காலத்தில் அப்பூரணத்தின் விளிம்புகள் கரைவதை நம் அகம் நோக்க மறுக்கிறது. நிலவை விழுங்கும் பாம்பென இருள் மூடிக்கொண்டாலும் எங்கோ அப்பூரணம் நிலை கொண்டிருக்கிறது என உளத்தை ஆற்றுகின்றன. நாம் கனவுகளின் குழவிகள் கூத்தரே. கனவையன்றிப் …

41: இருட் குழவிகள்

பேரொளியே நீ இருட்டின் குழவிமேதமையே நீ பித்தின் குழவிஅழிகலன்களே நீங்கள் மானுடரின் குழவிகள்அழியாத இருட்டே நீ வாழ்கஉன்னை வணங்குகிறோம்எங்களை விட்டு அகலாதிருகருமையே நீயே பேரழகுஇருள் கிரணங்களே நீங்களே எங் கரங்கள்இருளே விழியாகுக இருளே வழியாகுகஇருளே துணையாகுகஇருட்டின் மர்மங்களே எங்களைக் காக்குகஇருள் நாவுகளே எங்களின் புலனாகுகஇருள் கலைந்து விடியல் எழாதிருக்கட்டும்இருளே நம் பொழுதாய் அமைகஇருளின் குழவிகளே இங்கே எழுகஇருளின் கனவுகளே இங்கே பொலிக கானகம் இருளிலிருந்து தலை சிலுப்பி விழித்துக் கொண்ட …