49: ஆடி மயில்
திருதிகா தோழிகளுடன் மாற்றுடை அணிந்து தன்னைக் குடிகள் அறியாத வண்ணம் உருமாற்றிக் கொண்டாள். மன்றுக்குச் செல்லும் பெருவீதியால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வண்ண பேதங்களை நோக்கிக் களிச்சிரிப்பாடினர்கள் தோழியர். திருதிகா ஒவ்வொன்றையும் தொட்டு எடுத்து நோக்கினாள். ஒவ்வொரு ஆடியிலும் தன்னை உற்றாள். ஒவ்வொரு குழவியிலும் அதன் விழிகளையும் விளையாட்டுகளையும் நோக்கினாள். அவர்களின் கால்களிலும் கரங்களிலும் துள்ளியமையும் நடனத்தை புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். கருவண்ணக் குழந்தைகள் தேவர்களென நின்றாடின. மாந்தளிரும் …
