தன்னறம் இலக்கிய விருது : 2025

“மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு. பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு. இதனால்தான், ‘என்னுடைய மொழியில்…’ என்று நாம் சொல்கிறோம். தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு வார்த்தை எப்படியான அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும் என்று துருவியகழும் செயலாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு வார்த்தையின், ஒரு வாக்கியத்தின், ‘தொனி’யைப் பிடிப்பதற்கு நாம் வார்த்தையை, வாக்கியத்தைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அதாவது, மூலப்பிரதி அதன் …

சிறிதினும் சிறிது : நிதிக் கோரிக்கை

எந்தவொரு கலை நிகழ்வும் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்புடன் நிகழ வேண்டும் என்பது என் திண்ணமான நிலைப்பாடு. ஒவ்வொரு நிகழ்விலும் சமூகம் பங்களிக்கும் பொழுது அது பிறிதொரு அர்த்தம் கொண்டதாக ஆகி விடும். ஒரு கோயில் திருவிழாவைப் போலவோ ஒரு சடங்கைப் போலவோ ஒரு போராட்டத்தைப் போலவோ அது நிகழ வேண்டியது. எனது தம்பி பிரசாந்தின் ஒளிப்படக் காட்சியான ‘சிறிதினும் சிறிது’ ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. Catalogue வேலைகள் வடிவமைப்பு நிலையில் …

சிறிதினும் சிறிது : அழைப்பிதழ்

எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் நினைவாக அவரது தனியாள் ஒளிப்படக் காட்சி 14. 11. 2025 அன்று தொடக்கம் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திலுள்ள சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ‘கலம்’ கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. 14 ஆம் திகதி அவரது 31 ஆம் நாள் சடங்குகளும் மதிய போசனமும் திருநெல்வேலியில் உள்ள அப்பா வசிக்கும் இல்லத்தில் இடம்பெறும். கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடு …

ஒளியுள்ள இருட்டு – 2

2 அவனுடைய ஒளிப்படங்கள் 2018 இற்குப் பின் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தன. அவனும் தொடர்ந்து பயணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் அதிகமும் பிரயாணி அல்ல. மெல்ல அப்போது தான் செல்லத் தொடங்கியிருந்தான். முதலில் பண்ணைக் கடற்கரைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் படங்களை எடுப்பான். பிறகு நெடுந்தீவுக்குச் சென்றான். பின்னர் கிளிநொச்சி. கட்டை சில காலம் மல்லாவியில் பிரிந்தாவின் வீட்டில் நின்றான். அங்கு பிரிந்தாவின் அண்ணாவின் போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தான். …

ஒளியுள்ள இருட்டு – 1

1 எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் மரணம் குறித்து பலரும் கேட்டபடி இருக்கின்றனர். இதை எழுதத் தொடங்குவதற்கு முன்னர் நான்கைந்து குறிப்புகளை மனதில் எழுதி எழுதிக் கரைத்துக் கொண்டிருந்தேன். கடந்த ஐந்து நாட்களில் ஒரு கொஞ்ச நேரம் கூட எழுத நேரம் வாய்க்கவில்லை. ஆனால் அவனையும் அவன் மரணத்தையும் சொல்லியும் எழுதியும் அளிக்க வேண்டியிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரசாந்தின் இடக்காலின் முழங்காலிற்கு கீழ் உள்ள …

மெளனமான ஒரு கல்

மெளனமான ஒரு கல்லிலிருந்து பெருகும் ஒரு நீர் போல இந்த நாளிலிருந்து கசிகிறது காற்று மூச்சில் சிக்கியிருக்கும் ஒரு பார்வையைப் போல இந்த நாளிலிருந்து கசிகிறது தேகக் குளிர் என்றோ கட்டிலிருந்த பேயொன்று அறுந்து விலகுகிறது மூச்சை இழுத்துப் பிடிக்கிறது நழுவி விழுகிறது கண்ணீரை மொய்க்கின்றன இலையான்கள். (கட்டைக்கு) 14.10.2025 ஒளிப்படம் : சுகிர்தா சிவசுப்பிரமணியம்

அஞ்சலி : நன்மிளிர்

கவிஞரும் எழுத்தாளருமான நண்பர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது மகன் 26 நாட்கள் பிறந்திருந்த வேளை தொற்று ஒன்றினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் (21.10.2025) அன்று மரணமடைந்திருக்கிறார். அவருக்கு நன்மிளிர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இனிய பிஞ்சு மகன் உலகை பார்க்க முன்னரே பிரிந்து விட்டான். அஞ்சலிகள் மகனே. புத்திர சோகம் எந்த வயதிலும் கொடியது. உடலின் அனைத்து துயரங்களும் இன்பங்களும் வற்றிவிட்ட பிறகு உடலின் அனைத்து கண்ணீரும் புன்னகையும் வற்றி …

சிரிக்கும் புத்தனுக்கு

தமிழின் மகத்தான ஒரு உடல் மலர்ப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது அவனருகே மலர் மாலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன அவன் முன்னே சொற்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன இடையிடையில் யார் யாரோ அழும் ஒலிகள் கேவலைப் போல ஒரு மெளனமான மலரிதழ் விழுவதைப் போல முகத்தை அள்ளிக் கொள்வதைப் போல அவ்வளவு பெரிய உருவம் என நான் எண்ணியிருந்த அந்தக் குழந்தை ஒரு சாதாரண மலர்ப்பேழைக்குள் படுத்திருக்கிறது ஒரு மொழி என்பது தன் வாலைச் சுருட்டி …

ரமேஷ் பிரேதன் : அஞ்சலி

கவிஞரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதன் இன்று காலமாகி இருக்கிறார். அவரது கவிதைகளும் எழுத்துகளும் என் இள வயதில் மிகுந்த தீவிரத்தை அளித்தவை. தனி இரக்கத்தின் பேரழுகையென மண் வந்த கலைஞன் என எனக்குள் அவரைப் பற்றிய உருவம் படிந்திருக்கிறது. அஞ்சலிகள் ரமேஷ் பிரேதன். அந்தர நதி பேரழுகையின் உப்பு நதியில் வழித்தவறிச் சேர்ந்த பாய்மரத்தில் நான் இந்தப் பாய்மரம் பலநூற்றாண்டுகளாகக் கரை தொட்டதில்லை என்னைக் கடந்து செல்லும் பறவையே உனது …

வாசலிலே கிருசாந்தி

அண்மையில் செம்மணிக்கு அருகில் யாழ்ப்பாணத்து வரவேற்பு வளைவில் இடம்பெற்ற ‘வாசலிலே கிருசாந்தி’ எனும் செம்மணி தொடர்பான கவிதைகளின் புத்தக வெளியீட்டிலும் கிருசாந்தியின் நினைவு கூரலிலும் பங்குபற்றியிருந்தேன். எழுநா வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதை நூலிலிருந்து நிலாந்தனின் ‘அமைதி நகரின் மனம்பெரிகள்’ கவிதையை அங்கு வாசித்தேன். கவிதை வாசிப்பின் சிறு முற்பகுதி விடுபட்டிருக்கிறது. எஞ்சியதை பதிவிட்டிருக்கிறேன். செழியனின் கவிதை வரியைப் போல, “எஞ்சியிருப்பவை கரித் துண்டுகளே ஆயினும் எழுதியே முடிப்போம்”. ஒளிப்படம் …