பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம்

ஒரு போராட்டம் செய்யப்பட்டு இருக்கிறது இதற்குள்ளே. ஒரு யதார்த்தம் இருக்கிறது. அதேநேரம் புரட்சி இருக்கிறது. என் ஆண்மையின் அத்தனை விறைப்புத் தனங்களுக்குள்ளும் உள்ளே மரத்துபோன உணர்சி மிக்க பரம ரகசியமாக நீள நினைக்கும் காமத் தீயின் கட்டுக்கடங்காத ஆர்வத்தில் வரும் கோளாறுகளை எழுதும் அந்தத் துணிவு அதிர்கிறது. ஆரம்பத்தில் தூண்டி பின்னர் எல்லை தாண்டி இறுதியில் வாசகனை மனச்சிறையில் அடைக்கிறாய். என்னை போன்ற ஒரு ஆணுக்கு கிடைத்த ஒரு தண்டனை …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 03

ஆயுத வழி விடுதலைப்போரில் ஆர்வங் கொண்டெழுந்தோர் பெருமளவு இளைஞர்களே. ஆயுத வழியின் தொடக்க காலத்திலிருந்தே பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்திக்கொண்டு பலர் விடுதலை இயக்கங்களில் இணைந்தனர். மிக இளம் வயதில் அவர்கள் கேட்டவற்றையும் அறிந்தவற்றையும் கொண்டு சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகளை வெல்ல யுத்தமே வழியென்று நம்பினர். பேச்சு வார்த்தைகளில், கால இழுத்தடிப்புகளில் எல்லாம் அவர்களுக்கு விசனமிருந்தது. ஓர் அவசரம், துடிப்பு, வேகம். 1985 இல் வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் என்ற …

பொருள் கொள்ளுதலும் எதிர் கொள்ளுதலும்

இன்று மாலை ‘பிரியத்துக்குரிய பெண்ணுக்கு’ என்ற புனைவுப் பிரதியொன்றை வெளியிட்டிருந்தேன். அதையொட்டிப் பல நண்பர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன பிரச்சினை உனக்கு?. இது ஒரு மோசமான பிரதி, ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துகிறது. பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருக்கிறாய் என்று ஏசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் இரண்டு விடயங்களை அடிப்படையாக உரையாட வேண்டியிருக்கிறது. ஒன்று, ஒரு புனைவை எழுதுபவரின் சொந்த வாழ்க்கையில் நிகழும் ஒன்றைத் தான் பிரதியில் எழுதுகிறார்கள் என்று நினைப்பவர்கள். இது வாசிப்பு …

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு

நானொரு புணர் மிருகமாக என்னைக் கற்பனை செய்து கொள்கிறேன். அது அந்தரத்தில் என் விலாவை விறைக்கச் செய்கிறது. புழுக்கள் என் தோலில் வளர்கின்றன. மயிர்களைப் போல. கொலைக் கணத்திற்கும் விலங்குப் புணர்ச்சிக்கும் மூளை என்னை அழைக்கின்றது. அதற்கு உடலெல்லாம், வெறும் உடல். பிறிதொன்றுமற்ற உடலாக உன்னை ஆக்கிக் கொள்கிறேன். இந்தக் கற்பனை என்னை சிலிர்க்க வைக்கிறது. நொதிக்கும் திராவகங்களை உன்னில் பொழிந்து கொண்டே கேவும் உன் முகத்தசையில் என் விந்தைத் …

மூப்பதின் இனிமை

ஆயிரமாண்டுகாலம் பீப்பாயில் ஊற்றப்பட்டு, மா கடலின் கரை மணலில் தாழ்க்கப்பட்ட திராட்சையின் ஊறிய புளிப்பு, உதட்டிற் பரவ, நிறங்கள் கொட்டியவிழும் விளக்குகளின் தொடுகைகளை உணரும் தெருக்களில் அலையும் ஒரு கவிஞையின் மூப்பெய்திய மனம் கொள்ளும் உவகைகள் அந்த வைனின் ஆயிரமாண்டுகாலத் திரட்சியின் இனிப்பான கசப்பு. அது மானுட குலம் வாழ்வறிந்த இத்தனை காலமும் அலைந்து கொண்டும் மோதிக் கொண்டும் கொன்று கொண்டும் ஒன்றையொன்று அழித்தும் வாழ்வித்தும் உருமாறிய வாழ்வுகளின் அடியில் …

தெய்வங்களும் பாதாள நாகங்களும்

காதலிலும் காமத்திலும் ஆண் மனம் கொள்ளும் எதிர்நிலைகள் கவிதையில் இருமுனையும் கூர் கொண்ட மீன்முள்ளுகள் போல. அது ஒன்றினது இரு திசைகளெனவும் ஒரே உலோகத்தின் குளிரும் வெப்பமுமென ஆகுபவை. காதலும் காமமும் ஆண் மனதிற்குள் இரண்டு தனித்தனியான கதாப்பாத்திரங்களாகவே நிகழக்கூடியவை. அதற்கு அச்சமில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பல வேளைகளில் மானுட அடிப்படைகள் கூட இருப்பதில்லை. ஆண் காதலின் உலகம் கண்ணீரும் புனிதமும் பெருக்கெடுத்து ஓடுவதாக நிகழும் அதே வேளையில் அதன் …

என் தந்தையின் வீடு: கடிதம்

கிட்டதட்ட 2008 மாவீரர் உரையின் மிச்சம் எதிர்கால சந்ததியிடம் இந்த போராட்டத்தை கையளிப்பதாக பாலசந்திரன் தந்தை சொன்னது தான். பிளவுகளில் வரும் போதிமரங்களில் மெதுவாக வந்து தியானம் இருக்கும் புதிய தோரோக்களையும் உலக ஒழுங்கு சந்தையில் வந்தாடும் துவாரகாக்களுக்கும் எதையோ சொல்ல வருகிறது என்பதை விட இதைதான் சொல்கிறது அந்த ஆன்மாக்களின் வீடு பேறுக்காக யாகங்களை செய் என் இனமே என்று எதிர்காலத்திடம் கதறும் ஒரு நிகழ்கால புதுவையின் களக்கானம் …

வணக்கப்பாடல்: கடிதம்

முதல் வாசிப்பில்  காமக் கிழங்கே என்ற இடத்தில் தான்  என் கவனம் போனது மீண்டும் வாசித்தேன். ரசிக்கும் ஆணுக்குள் தான் பொங்கும் பச்சை அரிசி பாறையின் மூடி அடி வெப்பத்தில் தட்டி தட்டி விழுவதை பற்றித் தெரியும். அப்படியே கவிதை தடித்து போன உணர்ச்சி மிக்கவை தான். மரத்துப் போனவை என்பதை சொல்லி அந்த வெப்பத்துக்கு சுடர்இருள் என பெயர் இட்டு வளர்கிறது.  அங்கே ஒரு கட்டத்தில் நா(க்)கலப்பையின் உழுகை …

எப்போதும்

ஒரு திசையில் கொடி சுழற்றினர்மறு திசையில் கொடி பிடித்தனர் ஒரு வானத்தின் கீழ் எல்லாம் நிகழ்கின்றன ஒரு காற்று வீசுகிறதுமறு காற்று எரிகிறது ஒரு வழியில் மலர் தூவப்பட்டிருக்கிறதுமறு வழியில் கண்ணீர் இறைக்கப்பட்டிருகிறது ஒரு மரத்தின் கீழ் எல்லாம்சொரிகின்றன ஒருவர் மறக்கிறார்இன்னொருவர் மறக்க மாட்டேன் என்கிறார் ஒரு கனவு பலிக்கிறதுமறு கனவு தீகின்றது ஒரு பூமியில் எல்லாம் விளைகின்றன பொன்னும் பிணமும்சாவீடும் மங்களமும். (2021) ஒளிப்படம் (2024) : பிரபாகரன் …

எரியும் நெருப்பும் காற்றில்: 01

‘ஓ என் தேசமேஉன் மணல் வெளிகளில்நான் நடக்கின்றேன்உன் நிர்மலமான வானத்தில்நட்சத்திரங்களைநீ என் பார்வைக்கு பரிசளித்துள்ளாய்உனது சிரிப்பினால் என்சகோதரர்கள்வாழ்கின்றனர்நீ போர்த்துள்ள சோலையினுள்ஒளித்து வைத்துள்ளவெண் முத்துக்களை என் தங்கைகள்அணிந்துள்ளனர்வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னைஅணிந்துள்ளாய் – உனக்குநான் கொடுப்பதுஉயிர் மட்டுமே’. 1985 இல் எழுதப்பட்ட சிவரமணியின் கவிதை இது. விடுதலைக்கான கனவு இளைஞர்களின் மனதில் சூல் கொண்ட காலத்தில் பெருங்கனவுகளில் வாழ்ந்த ஒரு கவிஞை சிவரமணி. வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணித்துள்ளாய் என்று …