கவிதை வாசிப்பு – கடிதம்

வணக்கம் கிரி, கடந்த சில நாட்களாகதான் தினமும் கவிதை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இருந்தாலும் ஏதோ ஓர் புரிதல் தயக்கம் உள்ளது. இலக்கியம் வாசிப்பதால் அதே போல் கவிதையின் காட்சிகள் மட்டும் தோன்றுகிறதே தவிர அதை மீறி எதுவுமே யோசிக்க தோன்றுவதில்லை. கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்தால் மட்டும் போதுமா அல்லது அதற்கு வழி முறைகள் ஏதும் உள்ளதா? அன்புடன் மாக்கி * வணக்கம், கவிதையை மொழியின் புறங்கழுத்து வளைவெனச் சொல்லலாம். மிகவும் …

அழகற்ற கேள்வி

உறுமிச் செல்லும் அம்மாவின் மோட்டார் சைக்கிளின் பின்னிருந்து அவளது செல்லத் தொப்பையில் கைகளை வைத்து மேளமடித்தபடி செல்லும் சிறுமியின் விரல்களில் வழிவது அழகு வீதியின் இரண்டு கரைகளிலும் நுரைத்திருக்கும் சரக்கொன்றைகளின் கீழ் காத்திருக்கும் பெண்ணின் கொட்டாவியில் விரிவது அழகு கைக்குழந்தையைத் தோளில் வைத்தபடி அனுமார் போல அவனை அள்ளியெடுக்கும் அந்த மனிதனின் கற்பனையில் ஒளிர்வது அழகு ஒரு பச்சிலையை ஆய்ந்து நாய்க்கு நீட்டும் குழந்தையின் கண்களில் துடிப்பது அழகு மனிதர்களுக்கிடையில் …

அல் ஆடும் ஊசல்

இருளுக்கும் இருளுக்கும் இடையில் ஓர் ஊசலில் அமர்ந்திருக்கிறது காகம் ஒரு வெளவாலைப் போல. ஒளிக்கும் ஒளிக்கும் இடையில் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மிதக்க விரும்புவேன். இருளுக்கும் இருளுக்கும் இரண்டு செட்டைகள் கொண்ட மாபெரும் வண்ணத்துப் பூச்சியின் நுண்கரங்களில் நான் அருளை அள்ளும் ஒரு காகம். எனது ஊசல் அங்கனம் அமைவது நான் எனது செட்டையுமல்ல காலமும் அல்ல. ஊசலின் நூற்கோடு காற்றில் எறியும் விண்மீன்.

கவிதைகள். In

கவிதைகளுக்கான இணைய மாத இதழாக வெளிவரும் கவிதைகள்.in இன் ஜனவரிக்கான இதழ் வெளிவந்திருக்கிறது. மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் ஆகியோர் இவ்விதழின் ஆசிரியர்கள்.

கவிஞர்களைக் காதலிப்பவன்

எல்லாக் கவிஞர்களையும் காதலிக்கும் வினோதமான நோய் கொண்ட ஒருவனைப் பார்த்தேன். அவன் குரலில் மிதமான கார்வைசோப்பு நுரைக் குமிழிக்குள் காற்றெனஉடையக் காத்திருந்தது அவன் விழிகளில் பூமியை வெல்லும் ஒரு வானவில்லின்ஏழுவண்ணங்கள் இழுபட்டிருந்தன அவன் இதயத்தில் ஒவ்வொரு கவிஞரும் ஒரு இருக்கையை எடுத்துப் போட்டுக் கொண்டுசிலர் கால் மேல் கால் போட்டபடியும்சிலர் யோக அமர்விலும்சிலர் குடித்து விட்டு மேசைகளின் மேலிருந்து ஒரு கரம் உயர்த்தியபடியும்சிலர் கஞ்சா புகைத்த செவ்விழிகள்இரத்தினக் கற்களென மினுங்கும் …

சிருஷ்டி கீதம்

சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ஏதுமிருக்கவில்லை. ஆதியில் இருட்டு இருட்டால் மறைக்கப்பட்டிருந்ததுவேறுபடுத்தயியலாமையால்யாவும் நீராக இருந்ததுஅதன் உயிர்த்துவம் வெறுமையினால் போர்த்தப்பட்டிருந்ததுஅதிலிருந்து முடிவிலாத தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது. ஆதியில் அதிலிருந்து இச்சை எழுந்ததுமனதின் ஆரம்ப விதை அதுதான்இதயங்களில் தேடுகின்ற கவிஞர்கள்தங்கள் ஞானத்தினால்இன்மையில் …

கருணையான பைத்தியம்

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் தசையை வெட்டிக் கொடுத்து இரையாக இருந்த ஒன்றைக் காக்ககொடி படரத் தேரைக் கொடுத்து விட்டுநடந்து செல்லமகனின் கழுத்தைத் தேர்ச்சில்லுக்குப் பலியிட்டாகவலிப்பு நோயில் மடிந்தவனை மடியில் கிடத்திஇங்கு உனக்கொரு இடமிருக்கிறது என்று அழுவதாக நண்பர்களேகடைசி மோதகத்தில் …

முதற் குட்டி : மொழிபெயர்ப்பு

“முதற் குட்டி” கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பினை இப்னு அஸ்மத் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். தொடர்ச்சியான அவரது மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு வாழ்த்துகள். * පළමු පැටියා නිවසේ තිබූ සියඵ දේවලින් අම්මාව ගෙන එළියේ තැබුවෙමි අල්ලපු ගෙදරින් කාන්දු වූසාම්බ්‍රාණි දුමේ අග ඈ සිටියාය කොහේදීත් සැමවිට අතහරින්නේ නැතැයිපදිංචි වන කෙනෙකු මෙන් දහසකුත් දහස් වසරක්පළමු පැටියා ඉපදුනු දා පටන් ක්‍රිසාන්ත්සිංහලෙන් …

பாத்திரங்கள்

விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன் அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே நினைக்கப்படும் வெறுப்பது ஒருவகையில் விரும்புவதை விட நெருக்கமானதுமுன்னர் எப்படியோ அப்படியே நிகழ்வதால்இவை நினைப்பதை விட நிச்சயமானது நிச்சயமானவை உலகில் உள்ளவரைநாம் நம்புவதற்குக் கொஞ்சம் பிடியுண்டுநடந்து ஒளியுடன் செல்வதற்குஇருள் சூழ்ந்த பாதைகளுண்டுஒரு நாடகம் ஓயாமல் நிகழ்ந்து …