புஞ்சி மல்லி – குறிப்பு

ஏப்ரல் உயிர்மை இதழில் எழுத்தாளர் கிரிசாந் அவர்களின் “புஞ்சி மல்லி” வாசித்தேன். சந்தனி என்னும் இளம் பெண்ணிற்கும், கந்துல என்னும் குட்டி யானைக்கும் இடையேயான பாசத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கோபித்துக் கொண்டு, காட்டில் தொலைந்து போன கந்துல குட்டியை சந்தனியுடன் நாமும் சேர்ந்து தேடுகிறோம். புஞ்சி மல்லி என்றால், குட்டி தம்பி என்று அர்த்தமாம். அழகு. இருவருக்கும் இடையே உள்ள உறவை சந்தனியின் வழியாக சொல்லி இருப்பது …

புஞ்சி மல்லி – சிறுகதை

“யானைக்கு உன் குரல் தெரிந்து விட்டால் அது தான் அங்குசம்” என அப்பா சொல்லியது காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. தென்னையோலைகளை அடித்துச் சுழற்றிக் காற்று வீசியது. பெரிய தும்பிக்கையிலிருந்து நீர் பிசிறுவது போல ஓசையுடன் ஓலைகள் துள்ளின. “கந்துல… கந்துல.. இங்கே வா..” எனக் கூவினேன். தொண்டை நரம்புகள் வறண்டு ஊசி குத்துவது போல வலியெழுந்தது. “கந்துல ஒரு குட்டி அற்புதம். அவன் உனக்கு வரலாற்றில் ஒரு மகத்தான வாய்ப்பை …