யாழ்ப்பாணப் பட்டினத்தின் கோட்டைக்கு அருகில் உள்ள பண்ணைத் தரவைக் கடலில் இலங்கையின் தேசியக் கொடிகள் பல ஊன்றப்பட்டு காற்றிலாடுவதை சில நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். பட்டினத்தின் கடலில் நுடங்கியும் சீறியும் ஆடும் அக்கொடிகள் என்னை எரிச்சற்படுத்துகின்றன. மோதி நுரைத்து ஆர்த்தெழும் அலைகளே இல்லாத இந்தத்…
Category: Blog
Your blog category
‘குக்கூ’ சிவராஜ் – ஒரு விருது
சிவராஜ் அண்ணனை ஒரு முறையாவது நேரில் கண்டு தேம்பத் தேம்பச் சிரித்து கட்டியணைத்து நெஞ்சுடைய தழுவிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். அவர் நம் காலத்தின் பேரறத்தின் ஆன்மா கொள்ளும் தீரா அலைச்சலும் மாபெரும் உத்வேகமும் கொண்டவர். அவரைப் போல முற்றிலும் நேர்மறையான ஆளுமையை…
எங்கட புத்தகங்கள் – யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில்
யாழ்ப்பாணத்தில் இன்று துவங்குகின்ற சர்வதேச வர்த்தக் கண்காட்சியில் வழமை போல ‘எங்கட புத்தகங்கள்’ தமது காட்சியறையை நடத்துகிறார்கள். தொடர்ச்சியான செயலூக்கம் கொண்டு ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களை சமூகத்தை நோக்கி கொண்டு செல்லும் குலசிங்கம் வசீகரனின் பணி இந்த ஆண்டும் குன்றாது தொடர்க.
கல்விரல், சிறகை : வெளியீடு
கருப்பு பிரதிகள் வெளியீடான எனது நாவலான கல்விரலும் தர்மு பிரசாத்தின் குறுநாவலான சிறகையும் எழுத்தாளர் கருணாகரன் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது.
எழுநா : 42
ஜனவரி மாதத்திற்கான எழுநா இதழினை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம். தொடர்புகளுக்கு : இல 63. சேர்.பொன் இராமநாதன் வீதி,கலட்டிச் சந்தி, திருநெல்வேலி,யாழ்ப்பாணம்.+94 77 797 5029 எழுநா இணையத்தளம் : எழுநா
அம்மை அப்பன் அயோனிகன்
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பற்றிய ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தமிழின் தீவிர வாசிப்புச் சூழலில் அவரின் பெயரையும் வாழ்வையும் எழுத்தையும் ஒரு மிடறேனும் அனைவரும் அருந்தியிருப்பர். நான் அவரது கவிதைகளை சொல்லெண்ணி, சொல்லெண்ணிக் கற்றவன். இருபது வயதில் ஒரு கொப்பியில்…
கல்விரல் – இந்து தமிழ்
இன்றைய தினம் இந்து தமிழ்த் திசையில் கல்விரல் பற்றி சிறிய குறிப்பொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். நாவலை வாசித்து அவதானிப்புகளுடன் முன் வைத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.
எதிரொலிப்பு : சமகாலக் கலைக் காட்சி
1980 கள் தொடக்கம் சமகாலம் வரை ஈழத்துக் காண்பியக் கலைஞர்களின் பல படைப்புகளின் கண்காட்சி ஒன்று நாளை துவங்க இருக்கிறது. ஈழத்தின் காண்பிய மரபு பற்றிய பொதுச் சமூகத்தின் கவனம் உள்ளூரளவில் மந்தமானது. சர்வதேச அளவில் ஈழத்து காண்பியக் கலைஞர்கள் அடைந்திருக்கும் இடத்தை பற்றிய…
மூதன்னை தொட்ட மலர்
நேற்று மாலை ‘குக்கூ’ சிவராஜ் அண்ணாவிடமிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. ஓர் ஒளிப்படமும் குரற்பதிவும் இருந்தன. காந்தியவாதத்தின் பழுத்துக் கனிந்த தமிழ் முகமான மூதன்னை கிருஷ்ணாம்மாள் ஜெகந்நாதன் கொடிறோஸ் வாசித்துக் கொண்டிருந்தார். கண்கள் விம்ம அக்காட்சியை திரும்பத் திரும்பப் பார்த்தேன். எத்தனை களங்களைக் கண்ட…
தன்னறம் விருது 2025 : ஆவணப்படம்
கடந்த வருடத்திற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படுபவர்களைத் தன்னறம் குழுவினர் எடுக்கும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. ஒவ்வொரு ஆளுமையினதும் துல்லியமான இயல்புகளையும் உடலசைவுகளையும் கைப்பள்ளத்தில் அள்ளிச் சேர்க்க முனைபவை. ஷோபா சக்தியின் ஆவணப்படம் என்…