06: யட்சி விளி
பேரரசி நிலவை சொப்பிரஸ் மரக்கலன் கரைக்குச் சேர்ந்த தகவல் அரசன் நீலழகனுக்குக் கிடைத்த பொழுது நீராடப்போவதாகச் சொல்லி அரண்மனையின் நீரகத்திற்குச் செல்ல ஆயதமானாள். இறுதியாக நடந்த போரில் அரசனின் நெஞ்சில் கீறிய வாளினாலும் அங்கத்தில் பட்ட புண்களினாலும் அவன் பலநாட்களாக வலியில் துடித்தான். மருத்துவிச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவனைத் தேற்றினர். ஒருமுழுப்பருவம் அவன் நிலவையின் அருகில் செல்லவேயில்லை. பரத்தையர்கள் வந்து அவனைக் குடிலில் பார்த்துச் செல்வதகாச் சேடிகள் மூலம் ஒற்றறிந்தாள். …
