ஆடு ஜீவிதம்

இலக்கிய குரங்குகளில் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவல் பற்றிக் கதைத்திருக்கிறேன். அண்மையில் இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. இரண்டையும் எவ்விதம் நோக்க வேண்டும் என்ற ஒருசில அடிப்படைகளைத் தொட்டிருக்கிறேன்.

நனைந்து கொண்டிருக்கும் மழை

தமிழிற்குள் எழுந்த பெண் தன்னிலைகளில் அபூர்வமான உலகத்தைத் தனக்கென நெய்துகொண்டவர் ஃபஹீமா ஜஹான். அவரது கவியுலகிற்குள் சிறுமிகளும் கோழிக்குஞ்சுகளும் ஆட்டுக்குட்டிகளும் இயற்கையும் பல்வேறு வரிகளினூடாகத் துலங்கி வந்தன. பெண் தன்னிலைகளின் கசப்பும் துவர்ப்பும் ஃபஹீமாவில் வெளிப்பட்டாலும் அவரது வாழ்வை அணுகும் பார்வைக்குள் ஊடிழையும் பரிவும் கரிசனமும் மானுடப் பெருக்கின் மையவிசைகளுடன் இணைவு கொள்வது. ஃபஹீமா ஜஹானின் கவியுலகில் ஒரு வித நனைந்து கொண்டிருக்கும் மழையின் இயல்பு இருக்கிறது. தான் எதுவோ …

பேரியற்கையின் குழந்தைகள்

இயற்கையின் இருப்பில் பூமி மானுடருக்கென நிகழ்ந்திருக்கும் அபூர்வம். இப்பொழுது வரை அதுவே உண்மை. நாளை பிரபஞ்சத்தின் இன்னொரு கிளையில் வேறொரு உயிரினம் நம்மிலும் ஆற்றல் மிக்கதாக இருக்கலாம். ஆனால் தற்போதைக்கு பூமியின் ஆற்றல் மிகு உயிரினம் மனிதர்களே. கோடிக்கணக்கான பிற உயிரினங்களுக்கும் வாழிடம் இப்பூமியே. அதன் கருப்பை வினோதமானது. இயற்கையை அறிவியலாகவும் கலையாகவும் அணுகலாம். இரண்டுமே அவசியமான பார்வைகள் என்பது என் எண்ணம். அறிவியல் ஒரு முழுமை நோக்கில் உயிர்களின் …

எப்பொழுதும் கவிஞன்

ஒரு கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள். பொதுவாக கலை சார்ந்த செயல்களை பகுதி நேரமாகவே தேர்வு செய்கையில் அதற்கு மறுதலையாக கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தது பெரிய விடயம். ஆனால் சில காலங்கள் உங்கள் இலக்கிய செயற்பாட்டை காணவில்லை. இடைப்பட்ட இந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், உங்கள் தொடர்ச்சியான கேள்விகள் மகிழ்ச்சியையும் தொடர்ந்து விவாதிக்கும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. நான் கவிஞனாகுவது அல்லது எழுத்தாளராகுவது …

மகா சாவதானம்

மொழியின் ஒரு முனையை நுணுகி நுணுகி, அதனை மேலுமொரு சிற்றளவு கூட்டும் பணியனெக் கவிதையைக் கருதுவதுண்டு. ஒன்றே துருவித் துருவித் தொடை குடையும் வண்டென கவிஞர்களுள் நுழைவதுண்டு. அசைய முடியாமல் மடியில் படுத்திருக்கும் கவிதைக்குத் தெரியாமல் அவ்வண்டு அக்கவிஞரின் குருதியைப் பீறிட வைக்கும். நகுலனில் துளைத்த நான் எனும் வண்டு அதன் பல்வேறு ரூபங்களில் அவரது கவிதைகளுள் நுழைந்து இன்னொரு புறத்தால் வெளியேறுகின்றன. அந்த இரத்தப் பெருக்கு அக்கவிதைகளுக்குள் மீள …

கள்ளி மலர்ச்செண்டு

பெண் தன்னிலைகள் மொழியின் சுக்கானைப் பிடித்து தங்கள் சொந்தப் புயல்களின் சுழல் விளிம்பிலிருந்து மீண்டெழுவதென எழுந்த 90 களின் பின்னால், உருவான மாலுமிகளில் சல்மாவும் முதன்மையானவர். அவரது கவிதைகள் மொழிப்பெருக்கில் கசப்பெனவும் நிர்வாணமான உண்மைகளினதும் சுழல் விளிம்பில் நீந்திக் கரையேறுபவை. பெண்ணுலகின் பருவங்கள், உளத் துவர்ப்புகள், வேட்கைகள், நிராசைகள், ஆற்றாத கேள்விகள் என்பன சல்மாவின் கவிதைகளை ஊடறுத்து ஒலிப்பவை. அவரது கவிதைகளில் முன்வைக்கப்பட்ட பெண் தன்னிலைகளின் உலகென்பது பெண்ணுடலின் வித்தியாசங்களை, …

இன்னொரு நிலத்திலிருந்து: 01

இலக்கிய குரங்குகள் என்ற Temple Monkeys இனுடைய சனலில் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிமுகத் தொடர் ஒன்றைச் செய்யும் படி இயக்குனரும் நடிகருமாகிய விஜய் வரதராஜ் நண்பர் கிஷோகரினைக் கேட்டிருக்கிறார். கிஷோகரின் பரிந்துரையின் பெயரில் இத்தொடருக்காக நான் அழைக்கப்பட்டேன். முதலாவது காணொலி வெளியாகியிருக்கிறது.தொடரின் பெயர் இன்னொரு நிலத்திலிருந்து. 1980 களின் காலகட்டத்தை விளங்கிக் கொள்வது விடுதலைப் போராட்ட கால இலக்கியக்கங்களை விளங்கிக் கொள்ள அவசியமானது. அதனடிப்படையில் 1986 களில் வெளியாகிய …

அலைமுறியும் கடற்காற்றில்

தமிழ்க் கவிதைகளுக்குள் ஈழத்தின் நிலவுருவையும் பண்பாட்டு மனங்களில் ஒரு பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்தவை நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். அவரது கூர்மையான கவிதை வரிகள் மெளனமான மொழிவீதியில் ரயர் ஊரிக்கல்லில் எழுப்பும் சன்னமான ஒற்றை ஒலியைப் போல தனித்துவமானவை. நட்சத்திரனின் கவிமனம் 90 களின் பின்னணியில் உள்ள வாழ்க்கைச் சூழலில் இருந்து எழுந்தது. அக்காலகட்ட ஈழத்து வாழ்வின் துல்லியமான சித்திரங்களில் சிலவற்றை நட்சத்திரன் ஆக்கியளித்துள்ளார். அவரது கவிதைகளின் சங்கீதம் குளத்து நீரின் …

விடுதலையின் மாஇசை

தமிழின் கவியுலகிற்குள் பெண் குரல்கள் தங்கள் நுட்பமானதும் தீவிரமானதுமான வாழ்வை முன்வைக்கக் காரணமானவர்களில் சுகிர்தராணி முதன்மையானவர். சமூக ஒடுக்குமுறைகளின் சுவர்களை இடித்துத் தள்ளி முன்னகரும் கவிப்பெரும் இசை அவருடையது. சுகிர்தராணியின் கவிதைகள் தீண்டப்படாதவற்றின் மேல் கரிசனம் கொள்பவை. தீண்டாமையின் பல்வேறு தருணங்களைத் தீண்டி மொழிக்குள் நிலைக்க வைப்பவை. பளீரென்ற வாள் வீச்சுப் போல் விழும் வரிகள் சமூக மனசாட்சியை அறுத்து அதன் கடலளவு இரத்தம் கால்களின் கீழ் திரள அதன் …

செயற்களம் புகுவோருக்கு

ஒவ்வொரு சமூகப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் அததற்கான தனித்தன்மையான அணுகுமுறைகளைக் கோரக் கூடியவை. அப்பிரச்சினைகளைக் கையாளும் தனிமனிதர்களோ சமூக மட்ட அமைப்புகளோ யாரும் எவை குறித்தும் முழுமையான அறிதல்களோ பார்வைகளோ தீர்வுகளோ அறிந்தவர்களல்ல. தொடக்கத்தில் அச் சிக்கலும் அதைத் தீர்க்க வேண்டும் என்ற உந்துதலும் அவர்களிடமிருக்கும். எந்தவொரு செயற் தொடக்கமும் நாம் அவதானிக்கும் அன்றாடத்திலிருந்தே நம்முள் விதையென விழுகின்றன. நாம் அவற்றால் அலைக்கழிகிறோம். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கின்றோம். ஆனால் செயல்படுதலென்பது …