யாரோ யாருக்கோ
வாழ்க்கை தற்செயல்களின் புதிர்விளையாட்டு. எங்கோ சிந்தும் எதுவோ இங்கே இன்னொன்றாய் ஆகுவது. யார் கையோ தீண்டும் இசை யாருக்கோ மந்திரமென ஆகலாம். எவர் எப்பொழுதோ கொடுத்த முத்தம் இன்று இப்பொழுதை சொஸ்தப்படுத்தலாம். தற்செயல்கள் நோயளிக்குமளவுக்கு குணமாக்குபவையும் கூட. அதில் யார் கையும் இல்லாத ஏதோவொரு கை இருந்து கொண்டேயிருக்கிறது. இசையின் இந்தக் கவிதை அக்கரத்தின் ஓரணைப்பு. * மானிடர் அவசரத்தில் இருக்கும் இளம் பெண்ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயேமாகாளியம்மனின் வாசலில்காலூன்றிப் பிரார்த்தித்துக் …
