இளம் எழுத்தாளர்களுக்கு

ஓர் இளம் எழுத்தாளனாக இலக்கியம் அளிக்கும் சவால்களை ஓயாது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அறிதலின் இன்பம். எழுதுதலின் குன்றாத வேட்கை. ஜெயமோகனின் இந்தக் காணொலி இளம் எழுத்தாளர்கள் பற்றியிருக்கும் அவநம்பிக்கையையும் சலிப்பையும் அதிலிருந்து மீளும் வாசல்கள் பற்றிய திறப்புகளையும் சுட்டுவது. அறிதலும் காலமும் மாறிக்கொண்டேயிருப்பது. காலத்தைப் போலவே அறிதலும் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு மட்டுமே முன்னேறக் கூடியது. அண்மையில் வாசித்த கற்றலைப் பற்றிய ஜெயமோகனின் சில வரிகளும் இக்காணொலியின் சவால்களை …

அகவிழி : ஆவணப்படம்

அகவிழி ஆசிரியையான சரஸ்வதி அவர்கள் நான்கு வயதிலிருந்தே கண்பார்வை இல்லாதவர். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக, மேல்நிலை வகுப்பு (11 மற்றும் 12) மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடம் போதிக்கிறார். பிரெய்ல் முறையில் கற்பிக்கும் அகவிழி ஆசிரியை இவர். தன் வாழ்வில் இதுகாறும் தான் கடந்தவந்த வாழ்வுச்சூழ்நிலைகள் குறித்தும், தனக்கும் தன் அம்மாவுக்குமான உறவு குறித்தும் அவர் பேசுவதனைத்தும் நம்மை நெகிழ்வில் …

வையம் : இதழ்

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வையம் இலக்கிய மாத இதழில் அவயமிழந்தவர்கள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு ஒன்று இம்மாத இதழில் வெளியாகியிருக்கிறது. எனது ‘தொடுகை’ என்ற கவிதை இதழின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. சேரன், கருணாகரன், தீபச்செல்வன் ஆகியோரது கவிதைகளும்  வெளிவந்திருக்கின்றன.

நான் இப்போது ஒளி

எந்த இருட்டிலும் என்னை நீங்கள் எறிந்து தள்ளலாம்எரிவதால் அல்லஒளிர்வதால் நான் ஒளி என்னை எரித்து மிஞ்சும் கரியில் வைரங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்பிறகுவைரங்களில் ஒளிர் விடும் பட்டைகளில்ஊர்ந்து செல்லும் நீர்த்துளியென என்னைக் கண்டு கொண்டேன் ஒளிக்கு இருளேயில்லை.

கீதை : பேருரை

கீதைக்கான நாடகீயத் தருணத்தால் அது மதிப்பு மிக்கதாக ஒரு கலையாக்கத்தில் இடம்பெறுகிறது என்ற கருத்து முக்கியமானது. அரசியல் சரிநிலைகளுக்கு அப்பால் ஒரு நூலை அதன் வரலாற்று, தத்துவ, மெய்யியல் பார்வையில் வைத்து நோக்குவதும் முக்கியமானது. ஜெயமோகனின் இந்தப் பேருரைத் தொடர் கீதையை என்று மட்டுமல்ல. ஒரு நூலை புரிந்து கொள்வதற்கான பல வாயில்களையும் சாளரங்களையும் திறப்பது.

நடைக் கவிதைகள்

தேவதேவனின் புதிய கவிதைகளை அவரது வலைப்பூவில் வாசித்துக் கொண்டிருந்தேன். சிறு பிள்ளையின் கவிதைக் கொப்பி போல எளிமையான சொற்களும் வியப்பும் கொண்டவை. பலநூறு முறைமுறை சொல்லில் அமையப் பெற்றவை. ஆனால் அவை ஒரு நடைப் பழக்கம் போல அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு உவப்பானதாக இரண்டு கவிதைகள் நடைவழியில் புதுமலர்களெனத் தோன்றின. * நடைப்பயிற்சி எண்ணங்களை விலக்கியபடிஎண்ணங்களற்ற வெளிநோக்கிஅவன் நடந்துகொண்டிருந்தான் இப்போது அவன்எண்ணங்களற்ற வெளியில்நடந்துகொண்டிருந்தான் மரங்கள் நடுவே நடந்து செல்லும்ஒரு …

கவனச் சிதறல் பற்றி..

நம் காலத்தில் சலிப்பினாலும் பொருளற்ற வெற்றுக் கேளிக்கைகளாலும் தொடர்ந்து தங்கள் கவனிக்கும் திறனை இழந்து வரும் நூற்றுக்கணக்கானவர்களை நானும் அறிவேன். நானும் கூட இந்தச் சிக்கல் கொண்டவன். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சமூக வலைத்தளங்களை தொடர்ச்சியாக கவனித்ததின் வழி என் மன அமைப்பில் உண்டான நுண்ணிய மாறுதல்களை கடந்த பத்து மாதங்கள் அவற்றை விட்டு நீங்கிய பின்னர் வெகுவாக உணர்கிறேன். முதலில் எதையும் கருத்தூன்றிக் கவனிப்பதில் தொடர்ந்து சில …

புத்தகம் வாங்க..

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள குயின்சி புத்தகசாலையில் வாசகர்கள், நண்பர்கள் பெற்றுக் கொள்ளலாம். பிரதி ஒன்றின் விலை 1000 rs.

நோக்கின்மை

உலகத்தை நோக்குவதை நிறுத்திக் கொள்வது அல்லது வரைமுறைப்படுத்திக் கொள்வது இன்றுள்ள ஒருவர் செய்து கொள்ள வேண்டியது. எண்ணுக்கணகற்று இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வசவுகளிற்கும் எதிர்மறையான சொற்களுக்கும் வெறுப்பிற்கும் துயரங்களுக்கும் அரசியல் சிக்கல்களுக்கும் இடையில் ஒருவர் தன்னைத் தான் நோக்கி வாழ்வை நிகரறிந்து வாழ்வதே பெருஞ் சவாலாய் ஆகியிருக்கிறது. உலகின் பொதுப்பார்வை வட்டம் இன்று சமூக வலைத்தளங்களால் வடிவமைக்கப்படுகிறது. எது நீதி எது அநீதியென ஆளுக்கொரு கோர்ட் தரப்புக்கு நான்கு லோயர்களென கொதிகலன்கள் …