02: துதி விளி
பதும்மை தன் காம்புகளை ஆடியின் முன் நின்று விரல்களால் நீவினாள். ஈரலிப்பான காற்று அறைக்குள் நுழைந்து சுற்றியிருந்த திரைச்சீலைகளைக் கைளால் சுருட்டி அலைத்தது. சாளரத்திற்கு அருகில் நின்ற மல்லிகைக் கொடி தன் நறுமணத்தை அறைக்குள் அள்ளி எறிந்தபடியிருந்தது. கூடத்தில் ஆண்களும் பெண்களும் சிரிக்கும் ஒலிகளும் யாழ்நரம்புகள் யார் யாரினதோ விரல்கள் பட்டுத் துடிப்பதும் கேட்டது. அவள் குழலை இருதோளிலும் முன்புறம் சரியவிட்டு தலையைச் சீர்பிரித்து இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டாள். …
