நிஜந்தன் தோழன்

நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டதுதூரம் முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றனஇருவரில்ஒன்று போலிருந்த காயங்கள் மிச்சம்பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,இனியில்லைமருந்துகளுக்கும் வலிகளுக்கும்மேலால் மேவி எழுகிற புன்னகை.அறியு முன்பேநழுவிவிட்ட முகமும் குரலும், சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீஉந்த வாழ்வையும்இந்தச் சாவையும் இனியில்லை உனக்குஇருண்டகாலத்துக் குரல்கள்,நித்திய விடுதலை,சமாதானிக்கட்டும் உனது வெண்மை. இல்லாது போனகருணையின் பாகங்கள் பொருட்டுஇன்னும் கொஞ்சம் கண்ணீர். ஒருநாள் வருவேன்உனது குரல் தொடுகிற தெருவில் மருந்து மணக்காத தாழ்வாரங்களில்குமிழ் எரிகிற இருளில்அவ்வப்போது கொள்கிற மாத்திரைகளில்சரிகிற புத்தகங்களில்கசிகிறதுனது குரல் …

நிஜந்தன் : அஞ்சலி

நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான மூன்று தடவைகளை அழுத்தினேன். மூன்றும் தவறு. தசை நினைவென திறவு இலக்கம் இருப்பது என் வழமை.  கடந்த இரண்டு கிழமையாக எழுதவும் மனநிலை கூரவில்லை. எழுதவும் வாசிக்கவும் மனம் பாய்ந்து கடிப்பதும் பிறகு கைவிட்டு …

மகேஸ்வரன் சேர் : அஞ்சலி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் ஆறாம் வகுப்பிற்குச் சேர்ந்து முதல் நாள் ஆங்கிலப் பாடம். மூன்று அடுக்குகளாக உயர்ந்திருந்த கட்டடத்தில் என் வகுப்பிருந்தது. மகேஸ்வரன் சேர் துணி ஜீன்சும் அரைக்கைச் சேர்ட்டும் போட்டுக் கொண்டு வந்து ஆங்கிலப் பாடம் தொடங்கினார். அவரது உச்சரிப்பு மிகவும் ஆங்கிலத்தனமானது. அவரது நாக்கும் உதடுகளும் சுழன்று மடங்கி ஆங்கில ஒலியை உச்சரிப்பது, கேட்பவருக்குப் புதிய அனுபவமாய் இருக்கும். ஒவ்வொரு நாட்டுப் பாணி ஆங்கிலமும் பேசிக் …

அரவிந்தன் : அஞ்சலி

காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர், எழுத்தாளர் அரவிந்தன் இன்று காலமாகினார். நட்புடன் பழகுபவர். அவரது திடீர் இழப்பு காலச்சுவட்டுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் அறிவுச்சூழலுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய புன்னகையும் சாந்தமுமான முகம் இனியது. அவருக்கு என் அஞ்சலிகள்.

ஒளியுள்ள இருட்டு – 2

2 அவனுடைய ஒளிப்படங்கள் 2018 இற்குப் பின் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தன. அவனும் தொடர்ந்து பயணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் அதிகமும் பிரயாணி அல்ல. மெல்ல அப்போது தான் செல்லத் தொடங்கியிருந்தான். முதலில் பண்ணைக் கடற்கரைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் படங்களை எடுப்பான். பிறகு நெடுந்தீவுக்குச் சென்றான். பின்னர் கிளிநொச்சி. கட்டை சில காலம் மல்லாவியில் பிரிந்தாவின் வீட்டில் நின்றான். அங்கு பிரிந்தாவின் அண்ணாவின் போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தான். …

ஒளியுள்ள இருட்டு – 1

1 எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் மரணம் குறித்து பலரும் கேட்டபடி இருக்கின்றனர். இதை எழுதத் தொடங்குவதற்கு முன்னர் நான்கைந்து குறிப்புகளை மனதில் எழுதி எழுதிக் கரைத்துக் கொண்டிருந்தேன். கடந்த ஐந்து நாட்களில் ஒரு கொஞ்ச நேரம் கூட எழுத நேரம் வாய்க்கவில்லை. ஆனால் அவனையும் அவன் மரணத்தையும் சொல்லியும் எழுதியும் அளிக்க வேண்டியிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரசாந்தின் இடக்காலின் முழங்காலிற்கு கீழ் உள்ள …

அஞ்சலி : நன்மிளிர்

கவிஞரும் எழுத்தாளருமான நண்பர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது மகன் 26 நாட்கள் பிறந்திருந்த வேளை தொற்று ஒன்றினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் (21.10.2025) அன்று மரணமடைந்திருக்கிறார். அவருக்கு நன்மிளிர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இனிய பிஞ்சு மகன் உலகை பார்க்க முன்னரே பிரிந்து விட்டான். அஞ்சலிகள் மகனே. புத்திர சோகம் எந்த வயதிலும் கொடியது. உடலின் அனைத்து துயரங்களும் இன்பங்களும் வற்றிவிட்ட பிறகு உடலின் அனைத்து கண்ணீரும் புன்னகையும் வற்றி …

ரமேஷ் பிரேதன் : அஞ்சலி

கவிஞரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதன் இன்று காலமாகி இருக்கிறார். அவரது கவிதைகளும் எழுத்துகளும் என் இள வயதில் மிகுந்த தீவிரத்தை அளித்தவை. தனி இரக்கத்தின் பேரழுகையென மண் வந்த கலைஞன் என எனக்குள் அவரைப் பற்றிய உருவம் படிந்திருக்கிறது. அஞ்சலிகள் ரமேஷ் பிரேதன். அந்தர நதி பேரழுகையின் உப்பு நதியில் வழித்தவறிச் சேர்ந்த பாய்மரத்தில் நான் இந்தப் பாய்மரம் பலநூற்றாண்டுகளாகக் கரை தொட்டதில்லை என்னைக் கடந்து செல்லும் பறவையே உனது …

அஞ்சலி

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் தாங்கிய காலகட்டத்தின் முதல் தலைமுறை பெண் போராளியும் அதற்கெனச் சிறைசென்ற முதற் பெண்ணும் அகாலம் எனும் தலைப்பில் தன் வாழ்வனுபங்களைத் தொகுத்து முன்வைத்தவருமான முன்னோடிப் பெண் புஷ்பராணி அவர்கள் காலமாகியிருக்கிறார். அவரது பங்களிப்பும் பார்வைகளும் நமது சமூகத்தின் பல்தளங்களை உசாவி அறியும் அடிப்படைகளைக் கொண்டவை. விதை குழுமம் சார்பில் இலங்கை இனமுரண்பாட்டை விளங்கிக் கொள்ளல் எனும் தொடர் புத்தக உரையாடல்களைச் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்த்தியிருந்தோம். …