சிறிதினும் சிறிது : காட்சியேடு

எனது தம்பி, காலஞ்சென்ற பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சிக்கென உருவாக்கப்பட்ட காட்சியேட்டினை நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஆர்வமுள்ளோர் இணைப்பில் தரவிறக்கி வாசிக்கலாம். இணைப்பு : சிறிதினும் சிறிது ஒளியுள்ள இருட்டு – 1 ஒளியுள்ள இருட்டு – 2

சிறிதினும் சிறிது : ஒரு கடிதம்

இப்போது தான் ஒளியுள்ள இருட்டு வாசித்து முடித்தேன். வாழ்வின் தூரங்கள் பல இருந்தாலும் தாயின் மறைவும் சகோதரன் மறைவும் உனக்கும் எனக்கும் இருப்பதும் இயற்கை தான். இயற்கையின் விசித்திரங்களுக்காக எங்களை பணயம் வைத்து நடக்கும் இந்த நாடகத்தின் கிட்டத்தட்ட ஒரே பாத்திரங்கள் போல தான் உணர்வு. பிரசாந்தை நான் சிறுவயதில் அந்த பச்சை மரவெள்ளி உண்ட நினைவில் எடியூகெயாரில் கலந்து இருக்கிறேன். கட்டையை அதன் பின்பு பல காலம் கழித்து …

சிறிதினும் சிறிது : திறப்பு

பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சி நேற்று (14. 10. 2025) மாலை அவரது தந்தையினால் திறந்து வைக்கப்பட்டது. ஒளிப்படக் காட்சி இன்றும் நாளையும் (15, 16) காலை 10 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை பஸ்ரியன் சந்திக்கு அருகில் உள்ள ‘கலம்’ இல் இடம்பெறும். ஒளிப்படங்கள் : பிரிந்தா, குமணன்

சிறிதினும் சிறிது : நிதிக் கோரிக்கை

எந்தவொரு கலை நிகழ்வும் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்புடன் நிகழ வேண்டும் என்பது என் திண்ணமான நிலைப்பாடு. ஒவ்வொரு நிகழ்விலும் சமூகம் பங்களிக்கும் பொழுது அது பிறிதொரு அர்த்தம் கொண்டதாக ஆகி விடும். ஒரு கோயில் திருவிழாவைப் போலவோ ஒரு சடங்கைப் போலவோ ஒரு போராட்டத்தைப் போலவோ அது நிகழ வேண்டியது. எனது தம்பி பிரசாந்தின் ஒளிப்படக் காட்சியான ‘சிறிதினும் சிறிது’ ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. Catalogue வேலைகள் வடிவமைப்பு நிலையில் …

சிறிதினும் சிறிது : அழைப்பிதழ்

எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் நினைவாக அவரது தனியாள் ஒளிப்படக் காட்சி 14. 11. 2025 அன்று தொடக்கம் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திலுள்ள சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ‘கலம்’ கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. 14 ஆம் திகதி அவரது 31 ஆம் நாள் சடங்குகளும் மதிய போசனமும் திருநெல்வேலியில் உள்ள அப்பா வசிக்கும் இல்லத்தில் இடம்பெறும். கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடு …

ஒளியுள்ள இருட்டு – 2

2 அவனுடைய ஒளிப்படங்கள் 2018 இற்குப் பின் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தன. அவனும் தொடர்ந்து பயணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் அதிகமும் பிரயாணி அல்ல. மெல்ல அப்போது தான் செல்லத் தொடங்கியிருந்தான். முதலில் பண்ணைக் கடற்கரைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் படங்களை எடுப்பான். பிறகு நெடுந்தீவுக்குச் சென்றான். பின்னர் கிளிநொச்சி. கட்டை சில காலம் மல்லாவியில் பிரிந்தாவின் வீட்டில் நின்றான். அங்கு பிரிந்தாவின் அண்ணாவின் போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தான். …

ஒளியுள்ள இருட்டு – 1

1 எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் மரணம் குறித்து பலரும் கேட்டபடி இருக்கின்றனர். இதை எழுதத் தொடங்குவதற்கு முன்னர் நான்கைந்து குறிப்புகளை மனதில் எழுதி எழுதிக் கரைத்துக் கொண்டிருந்தேன். கடந்த ஐந்து நாட்களில் ஒரு கொஞ்ச நேரம் கூட எழுத நேரம் வாய்க்கவில்லை. ஆனால் அவனையும் அவன் மரணத்தையும் சொல்லியும் எழுதியும் அளிக்க வேண்டியிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரசாந்தின் இடக்காலின் முழங்காலிற்கு கீழ் உள்ள …

மெளனமான ஒரு கல்

மெளனமான ஒரு கல்லிலிருந்து பெருகும் ஒரு நீர் போல இந்த நாளிலிருந்து கசிகிறது காற்று மூச்சில் சிக்கியிருக்கும் ஒரு பார்வையைப் போல இந்த நாளிலிருந்து கசிகிறது தேகக் குளிர் என்றோ கட்டிலிருந்த பேயொன்று அறுந்து விலகுகிறது மூச்சை இழுத்துப் பிடிக்கிறது நழுவி விழுகிறது கண்ணீரை மொய்க்கின்றன இலையான்கள். (கட்டைக்கு) 14.10.2025 ஒளிப்படம் : சுகிர்தா சிவசுப்பிரமணியம்