அஞ்சலிக் கூட்டம்
மறைந்த ஈழத்து நாடக முன்னோடி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 21. 01.2025 மாலை மூன்று மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையின் ஏற்பாட்டில் நிகழவிருக்கிறது.
மறைந்த ஈழத்து நாடக முன்னோடி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 21. 01.2025 மாலை மூன்று மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையின் ஏற்பாட்டில் நிகழவிருக்கிறது.
எழுநா இணைய இதழில் தி. செல்வமனோகரன் எழுதி வரும் நாட்டார் தெய்வங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து நாட்டார் தெய்வங்கள் குறித்த வரலாற்று மற்றும் சமகாலப் பயில்வுகள் குறித்த புறச்சித்திரத்தை அளிப்பவை. வாசிப்பில் ஒரு நேர்கோட்டை இழுத்துக் கொண்டு செல்வது போல ஒன்றன் பின் ஒன்றாக நீள்பவை. உள்ளூர் பயில்வுகளையும் தெய்வங்களையும் அறிமுகம் செய்து கொள்வது புனைவெழுத்தாளர்களின் கனவுகளை நிரம்பச் செய்ய உதவும். நமது பண்பாட்டு மனத்தை உண்டாக்கிக் …
ஈழத்தின் நாடக வரலாற்றின் முதுதந்தை குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் காலமாகி விட்டார். அவர் எனதூரைச் சேர்ந்தவர். எனது வீட்டிலிருந்து ஐந்தே நிமிடங்களில் சென்று விடக் கூடிய தூரம். இளவயதில் அவர் ஒவ்வொரு காலையிலும் சைக்கிளில் தின்னவேலி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒழுங்கு குலையாத ஒன்று நம் பார்வையில் படுகையில் அது நம்முள் ஒரு படிமாகி விடுகிறது. அவருடன் ஒரு நீண்ட சந்திப்பும் ஒரு சிறு …
ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான அ. முத்துலிங்கம் அவர்களின் இந்த நேர்காணல் அவரது எழுத்துகளைப் பற்றியும் பார்வைகள் பற்றியும் சற்றே விரிவான தகவல்களை அளிக்கக் கூடியது. அவரது எழுத்துகளைப் போலவே நேர்காணலில் அவரது குரல் செறிவாக வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்ப நிலை இலக்கிய வாசகர்கள் மற்றும் புதிதாக எழுத வருபவர்கள் அவரின் எழுத்துகளை வாசிக்க இதுவோர் நல்ல தொடக்கம்.
பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர, சூழலை நீங்கி வாழ முடியாது. இங்கே சுவேதா என்ற ஆட்டுக்குட்டியின் உலகமே கதையாகியுள்ளது. அந்தக் குட்டி வாழ்கின்ற சூழலில் உள்ள மனிதர்கள், நாய்கள், …
கடந்த வருடம் தும்பி சிறார் இதழ்நிறுத்தப்பட்ட செய்தி வெளியாகிய போது அதன் பயணத்தைத் தொடருபவர்கள் அடைந்த இழப்புணர்வும் துக்கமும் தும்பி எனும் மகத்தான கனவினை நீங்குவதன் துயரே. இவ்வருடம் தும்பி இதழ் மீளவும் சித்திரை முதல் நாள் வெளிவரும் எனும் பெருமகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. தும்பி மீளவும் பறக்கும் என்பதை ஆழத்தில் ஒரு குரலாய் என்றும் அறிந்திருந்தேன் என எண்ணுகையில் வியப்பாயிருக்கிறது. மகத்தான கனவுகள் அப்படித் தான். பெருந்துயர்களை அடைந்து …
நட்சத்திரங்கள் உதிராத வானமுண்டுநீலம் கலையாத ஆழிகளுண்டுமீன்கள் வாழும் மலைகளுண்டுநிலவும் சூரியனும் பருவங்களுமுள்ளன தூண்டிலைப் பிடித்திருப்பவர்ஒரு நூற்றாண்டு காத்திருக்கிறார் பிறகு விழித்துக் கொள்கிறார்ஒரு மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் போல. ஓயாது புலரும் பொழுதுகளுக்கும் அணைபவற்றுக்கும் இடையில்எரியாது சுடரும் சுடர்பூத்திருக்கிறதுமுக்காலமும்.
தன்னறம் விருது 2024 இல் சாம்ராஜ் ஆற்றிய உரை. ஷோபா சக்தியின் புனைவுகள் பற்றிய பார்வைகளைச் சுருக்கமாக விபரித்திருக்கிறார்.
தன்னறம் விருது விழாவில் ஷோபா சக்தி ஆற்றிய தன்னுரை வெளியாகியிருக்கிறது. ஈழத் தமிழர்களில் எவரேனும் ஒருவர் அதைப் போன்ற ஒரு நன்றியுரையை வழங்க இயலுமா என எண்ணிப் பார்க்கிறேன். வாய்ப்பேயில்லை. அந்த ஆறு நிமிடங்களென்பவை ஷோபாவின் உலகில் அன்றாடங்கள். எங்கள் நிலத்தின் அசல் முகம்.