ஞான பீடம் : கண்டனம்

“யோவ் மிலிட்ரி .. வைரமுத்துக்கு ஞான பீடம் கொடுத்தற்கு கண்டனமில்லையா? அகழ் போன்ற பண்ணையார்புரங்களே கண்டனம் வெளியிட்டு விட்டன. தமிழ் இலக்கிய உலகமும் இணையப் பெண்ணியர்களும் ஒரே கோரிக்கைக்காக அணிந்திரண்டு நிற்கும் இது போன்ற அபூர்வமான ஒரு வரலாற்றுத் தருணம் இனி நடக்காது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மான்களும் புலிகளும் ஒரே கோரிக்கைக்ககாக முழக்கமிடுகின்றன.  வெட்டு ஒன்றாய்ச் சொல்லுங்கோ. யுத்தத்தில நீங்கள் ஆற்ற பக்கம்?”  “பிதாமகற்ற”. “தமிழ் இலக்கிய உலகத்தை …

சிறிதினும் சிறிது : காட்சியேடு

எனது தம்பி, காலஞ்சென்ற பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சிக்கென உருவாக்கப்பட்ட காட்சியேட்டினை நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஆர்வமுள்ளோர் இணைப்பில் தரவிறக்கி வாசிக்கலாம். இணைப்பு : சிறிதினும் சிறிது ஒளியுள்ள இருட்டு – 1 ஒளியுள்ள இருட்டு – 2

கல்விரல் – குறிப்பு 3

கிடாயில் அமர்ந்திருக்கும் பிசாசொன்று போரின் வடுக்களை மேய்கையில் அலையுறும் பெண் மனம் இந்நாவல். போருக்குப் பின்னான ஒரு நிலத்தில், செல்லடித்து விழுந்து கிடக்கும் ஒரு பனை மரத்தில், தனது கூட்டைத் தொலைத்துவிட்டு தேரிக்காடெங்கும் தேடியலைகிற தூக்கணாங் குருவியொன்று அதன் குஞ்சுகளின் அவலத்தை கழுகுகளுக்கும் பாம்புகளுக்கும் முன் நின்று பாடுவதாய் ஒரு நாவலை எழுதி முடித்தல் கடினமானது. இயக்கத்தில் இருந்த போரளிகள் குறித்து பிற்காலச் சூழலில் எழுதப்பட்ட கதைகள் வெகு குறைவாகவே …

எழுநா : 43

ஈழத்து புலத்தில் பண்பாட்டு ஆய்வுகளை பரந்துபட்ட தளத்தில் தொடர்ந்தும் வெளியிடும் எழுநா இதழின் 43 இதழினைத் தற்போது அவர்களின் இணையத்தளத்தில் வாசிக்க முடியும். வரலாறும் தத்துவமும் இலக்கியத்தின் இரண்டு சிறகுகள். ஈழத்து இலக்கியச் சூழல் இது இரண்டும் முயங்காத வெறுவெளி. வரலாற்று ஆய்வுகளுக்கு புனைவு வெளியில் பல அடுக்குகள் கொண்ட முக்கியத்துவம் உண்டு. காலகட்டத்தை புரிந்து கொள்ளவும், வரலாறு இயங்கும் ஓட்டத்தை அறியவும் ஒரு புனைவெழுத்தாளர் ஓயாது ஆய்வுகளை வாசிக்க …

தும்பி : 89

தும்பி 89 இதழ் அச்சில் மலர்ந்து எதிர்பார்த்து காத்திருந்த குழந்தைகள் கைகளில் சென்றடைந்துள்ளது. அன்றாட வேலைகள் நிறைய இருக்கும் பெரிய கரடிக்கும் விளையாடத் துடிக்கும் குட்டி கரடிக்கும் இடையே நிகழும் சுவாரசியமான சித்தரிப்புகளை கொண்ட கதை இவ்விதழின் பிரதான ஓவிய கதையாக வெளிவந்துள்ளது. எளிய வாசகங்களுடன் மென்மையான ஓவியங்களைக் கொண்டுள்ள இக்கதை உறவுகளின் பிணைப்பை, உழைப்பின் முக்கியத்துவத்தையும் அழகுற கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறோம். மேலும், நண்பனுக்காக ஏங்கும் பனிக்கரடி …

ஆடல் : சிறுகதை

‘ஆடல்’ எனும் என் புதிய சிறுகதை மயிர் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை தளத்தில் பின்னூட்டமோகவோ அல்லது Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அனுப்பி வையுங்கள். இணைப்பு :

அகழ் : ஒரு கண்டனம்

காலையிலேயே நண்பரொருவர் அகழில் வெளியாகியிருக்கும் ‘ஆண்பால் உலகு’ என்ற நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் அபிப்பிராயக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். வாசித்தேன். வழக்கமான நட்சத்திரன் செவ்விந்தியன் வகையறாக் குறிப்பு. தொண்ணூறுகளில் வெளியான வசந்தம் 91 எழுதிய நட்சத்திரன் செவ்விந்தியன் எனும் இளம் கவிஞன் மீது இன்றும் மதிப்பிருக்கிறது. ஆனால் அவர் எழுதும் புலனாய்வுகள் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கதாக இருந்ததில்லை. அல்லது அவர் சர்ச்சையால் அடையும் பேஸ்புக் கவனயீர்ப்புக்கு அப்பால் எந்த ஒரு …

எனது நிலம், எனது கடல்

யாழ்ப்பாணப் பட்டினத்தின் கோட்டைக்கு அருகில் உள்ள பண்ணைத் தரவைக் கடலில் இலங்கையின் தேசியக் கொடிகள் பல ஊன்றப்பட்டு காற்றிலாடுவதை சில நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். பட்டினத்தின் கடலில் நுடங்கியும் சீறியும் ஆடும் அக்கொடிகள் என்னை எரிச்சற்படுத்துகின்றன. மோதி நுரைத்து ஆர்த்தெழும் அலைகளே இல்லாத இந்தத் தப்புக் கடலைத் தான் நான் பார்த்து வளர்ந்தேன். எத்தனை மூர்க்கமற்ற எளிய நீர்ப்பரப்பென்றாலும் அது என் கடல் என்ற உணர்வு எனக்கிருக்கிறது. கடந்த தேசிய …

‘குக்கூ’ சிவராஜ் – ஒரு விருது

சிவராஜ் அண்ணனை ஒரு முறையாவது நேரில் கண்டு தேம்பத் தேம்பச் சிரித்து கட்டியணைத்து நெஞ்சுடைய தழுவிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். அவர் நம் காலத்தின் பேரறத்தின் ஆன்மா கொள்ளும் தீரா அலைச்சலும் மாபெரும் உத்வேகமும் கொண்டவர். அவரைப் போல முற்றிலும் நேர்மறையான ஆளுமையை என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. ஒருமுறை கூட நேரில் பார்க்காத, எங்கோ இவ்வளவு தொலைவில் இன்னொரு தீவில் இருக்கும் எளிய எழுத்தாளனுக்கும் சுரக்கும் பரிவு அவர். …

கல்விரல் – குறிப்பு 2

எழுத்தாளனின் படைப்புகளைப் புரிதலில் வெளியீட்டாளரின் அரசியல் நிலைபாடு ஒரு மறைமுகச் சூழலாக செயல்படும். வெளியீட்டாளர் எந்த வகை நூல்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். எவற்றைத் தவிர்க்கிறார்கள் என்பதன் வழியே அந்தப் படைப்புகளின் அரசியல் ரேகைகள் எவ்வாறு வடிகட்டப்படுகின்றன என்பதை கவனிக்கலாம். படைப்பு தனித்த உருட்டில் நின்றாலும், எழுத்தாளர் ஒரு சமூகப்பிராணி என்பதால் அரசியல் படைப்பின் அடுக்குகளில் இயல்பாகவே ஒலித்துத் தோன்றுகிறது. அது வெளிப்படையான கருத்துரையாய் அல்ல, கதாபாத்திரத் தேர்வுகள், குரல் மற்றும் மௌனப் …