கண்ணாடிக்கு அப்பாலும் இப்பாலும்
இளங்கோ டிசே தன் பங்கரிலிருந்து கையில் கிடைத்த தாள்களில் எழுதிய சிறு குறிப்புகளுடன் தைரியமாக மேலே ஏறி வந்திருக்கிறார். அதற்கு முதலில் வாழ்த்துகள். அப்படியாவது நம் ஈழத்துச் சூழலில் இருந்து ஒருவராவது வந்து தன் நம்பிக்கைகளைச் சொன்னால் தான் கூருணர்வுள்ள வாசகர்களுக்கு அவர்களின் மதிப்பீடு, ரசனை பற்றித் தெரியும். மொழிநடையில் முன்னோடிகளினது செல்வாக்கினைக் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘முளைத்தலெனும் தொடர்‘ குறிப்பில் நட்சு முதல் டிசே வரை அவர்களின் இயல்புகளின் …
