சலாங்கையா – சிறுகதை
மலைப் பாறையின் இடையில் சிக்கிக் கொண்டது போல என் வலக்கை விரல்கள் அவரது கையால் உறுதியாகப் பிடிக்கப்பட்டிருக்க, தோளில் மறுகையைப் போட்டுக் கொண்டு “எங்கள ஏத்துக்குங்கன்னு சொல்லல. புரிஞ்சுக்குங்கன்னு தான் சொல்லுறன்” என்றார். நடுக்கமற்ற உடுக்கொலி போன்ற கார்வை கொண்ட குரல். குமிழ் விளக்கின் மஞ்சள் ஒளி அவரில் விளாசிக் கொண்டிருந்தது. கரிய பாறையில் நீர்மினுக்கம் போல. மின்னும் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் பருத்த மீன்கள் போன்ற கண்களில் சுருக்கமான …
